சனி, 16 ஜூலை, 2016

குட்டி முதலாளித்துவ அரை வேக்காடுகளும், எந்த
ஆவணத்தையும் படித்துப் பார்க்காமலேயே
கருத்துக் சொல்லும் கருத்துக் கபோதிகளும்தான்
பெருவாரியான விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள்.
நிகழ்ச்சியை நெறியாள்கை செய்யும் ஊடகக்காரரோ
தற்குறியாகவும் விஷயம் தெரியாதவராகவும்
இருப்பதால், அவரால் நிகழ்ச்சியின் நோக்கத்தை
நிறைவு செய்ய இயலாது.
**
ஆவணங்களைப்  படிக்காமல் எந்த ஒரு கருத்துக்கும்
வர இயலாது. மோடி அரசின் ஆவணங்களை
மட்டும் படித்தால் போதாது. ராஜிவ் காந்தி, நரசிம்மராவ்
அரசுகள் கொண்டு வந்த கொள்கை பற்றிய
ஆவணங்களையும் படிக்க வேண்டும்.
**
முதலில் மோடி அரசு என்ன சொல்கிறது என்பதைத்
தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகே
ஒரு கருத்துக்கு வர முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக