ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

பொருள்முதல்வாத வகுப்பு!
----------------------------------------------
நாள்: 18.08.2018 சனிக்கிழமை
மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை.

இடம்: வங்கி ஊழியர் OBC சங்க அலுவலகம்,
முதல் மாடி, எண்-6, மேற்கு அவென்யூ
கோடம்பாக்கம், சென்னை 600 024.

அடையாளம்:
கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய
பாலச் சுவருக்கு எதிரில் உள்ள தெரு.  
மேனகா அட்டைகள் (Menaka Cards) எதிரில்.   

தலைமை: டாக்டர் பி மனோகர்.

விளக்க உரை: பி இளங்கோ சுப்பிரமணியன்

பொருள்: பொருள்முதல்வாதம் (தொடக்க நிலை)

குறிப்பு: தற்போது நடைபெறும் வகுப்பு
பொருள்முதல்வாதம் (தொடக்க நிலை) வகுப்பாகும்.
அடுத்த கட்டமாக, ஓரிரு வாரங்களில்
பொருள்முதல்வாதம் (advanced)  வகுப்பு நடைபெறும்.
இந்த வகுப்பின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஏற்பாடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.

அனைவரும் வருக!
************************************************************
பொருள்முதல்வாதம் (Preliminary)
பொருள்முதல்வாதம் (Advanced)
என்று இரண்டு கட்டங்களாக
வெவ்வேறு நாட்களில் வகுப்பு நடைபெறும்.
இரண்டாம் கட்ட வகுப்பின் தேதி பின்னர்
அறிவிக்கப்படும்.

18.08.2018 சனியன்று பொருள்முதல்வாதம் (Preliminary)
வகுப்பு மட்டுமே நடைபெறும்.
  

அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே
(ஒவ்வொரு சீரும் ஒவ்வொரு தளையும்)
செப்பலோசை கிடைக்கும். எங்காவது
தளை தட்டினால் செப்பலோசை குன்றும்.
மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர், பூச்சீர்,
நிழற்சீர் ஆகிய சீர்களில் முதல் மூன்று
சீர்களை மட்டுமே வெண்பா ஏற்கும். பிற தளை
விரவல் வெண்பாவில் தகாது. அகவல், கலி, வஞ்சிப்
பாக்கள் பிற தளை விரவலை ஏற்கும்.

ஓசை சரியாக அமைந்திருப்பதை வெண்பாவை
வாய் விட்டுப்பாடி அறிய வேண்டும். நுண்மாண்
நுழைபுலம் உள்ளோரே இதனை அறிய முடியும்
என்பர் இலக்கண நூலோர்.


சொல்ல வழியில்லை. ஏனெனில் செப்பலோசை
என்பது testable அல்லது verifiable அல்ல. அது நிறைவின்
அடையாளம். சீர் தளைகள் ஒழுங்காக அமைந்து
விட்டாலே செப்பலோசை பயின்றுதான் தீர
வேண்டும். செப்பலோசையைக் கண்டறியும்
தனிச்சோதனை எதுவும் இல்லை. அது ஒரு
redundant factor. இதுவரை எந்த வெண்பாவையும்
செப்பலோசை பயிலவில்லை என்று எவரும்
தள்ளுபடி செய்த வரலாறு இல்லை.

எனவே தங்களின் செயலி மிகச் சரியாகவே
செயல்படுகிறது என்று நிறைவடைக.


அகவல்பாவையும் வெண்பாவையும் மாறி மாறி
வாய்விட்டுப் படித்தால், செப்பலோசை என்பது
என்ன என்று அறியலாம். பிற பாக்களினின்றும்
வெண்பாவின் ஓசை எப்படி வேறுபடுகிறது
என்று அறிந்திட ஒரே வழி இதுதான். பல்வேறு
ஓசைகளை (செப்பல், அகவல், துள்ளல், தூங்கல்)
தொடர்ந்தும் மாறி மாறியும் வாய்விட்டுப்
படிக்க வேண்டும். அப்போது செப்பலோசையே
உயர்வானது என்பது புலப்படும்.


நாள் மலர் காசு பிறப்பு என்ற வாய்பாட்டில்தான்
வெண்பா முடிய வேண்டும் என்று சொல்லும்போதே
அங்கு செப்பலோசை உறுதி செய்யப் படுகிறது.
ஈற்றுச் சீர் அற்புதமான இலக்கணத்தைக்
கொண்டது. அது வெண்பாவுக்கு ஒரு
அமைதியைத் தருகிறது. ஒரு நிறைவைத்
தருகிறது.

 அவ்வாறு அமைதியும் நிறைவும் தரும்  பிரதீப்
ஓசையே செப்பலோசை.

கூட்டத்திற்கு வருக!
----------------------------------
பொருள்முதல்வாத வகுப்பு 18.8.2018 சனிக்கிழமை
மாலை 6.30 to 8.30 நடைபெறுகிறது. இடம்:
6 மேற்கு அவென்யூ, மேனகா கார்ட்ஸ் எதிரில்,
கோடம்பாக்கம். பொருள்முதல்வாத
வகுப்பு by இளங்கோ சுப்பிரமணியன்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் மார்க்சியம்
சரியானது என்ற முடிவுக்கு எப்படி வருகிறார்கள்?
மார்க்சியத்தைக் கற்று, தேர்ந்து, தெளிந்து அதன்
பின் அவர்கள் மார்க்சியத்துக்கு வருவதில்லை.
அவர்கள் மார்க்சியம் அரசியல் ரீதியாக சரியானது
என்று புரிந்து கொண்டவுடனேயே மார்க்சியத்துக்கு
வந்து விடுகின்றனர். It is sufficient if they are POLITICALLY
CONVINCED.

ஆனால் படித்தவர்கள், நடுத்தர வர்க்கம்,
குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஆகியோர்
அரசியல் ரீதியாக மட்டும் மார்க்சியத்துக்கு
வருவதில்லை. மார்க்சியம் சரியானதுதான்
என்ற புரிதலுக்கு வருவதற்கு, அவர்கள்
அறிவு ரீதியாகவும் திருப்தி அடைய
வேண்டியவர்களாக உள்ளனர்.
It is imperative that they are to be INTELLECTUALLY
CONVINCED.

எனவேதான் மார்க்சியக் கல்வியளித்தல்,
பிரச்சாரம், விவாதம், உரையாடல் ஆகிய
அனைத்தும் தேவைப் படுகின்றன. எதிர்க்
கருத்துக்களை முறியடிக்க POLEMICS எனப்படும்
கருத்து மோதல்கள் அவசியமாகின்றன.
POLEMICAL DEBATES இல்லாமல் மார்க்சியத்தை
சரியானது என்று நிரூபிக்க இயலாது.
Polemical debates are HARSH naturally.லெனின்
பெருமளவுக்கு கருத்து மோதல்களில்
(polemical debates) ஈடுபட்டவர் என்பது வரலாறு.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக