புதன், 22 ஆகஸ்ட், 2018

பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் 
தலித்துகளும் ஆரியர்களே!
பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் 
தலித்துகளும் திராவிடர்களே!
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
ஆரியப் படையெடுப்பு என்பது அப்பட்டமான பொய் என்று 
டாக்டர் அம்பேத்கார் நிரூபித்துள்ளார். இதோ அவர் கூறுவதைப் 
படியுங்கள். 

டாக்டர் அம்பேத்கார் பின்வருமாறு கூறுகிறார்:
எனவே எனது முடிவுகள் பின்வருமாறு:-
1) ஆரிய இனம் என்று எந்த ஒரு இனமும் வேதங்களில் 
குறிப்பிடப் படவில்லை.
2)  இந்தியாவின் மீது ஆரிய இனத்தவர் படையெடுத்தனர் 
என்பதற்கோ, இந்தியாவின் பூர்வ குடிகளாகக் கருதப்படும் 
தாசர்களையும் தஸ்யூக்களையும் வென்றனர் என்பதற்கோ 
வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை.
3) ஆரியர்களுக்கும்  தாசர்கள்-தஸ்யூக்களுக்கும் இடையிலான 
வேறுபாடு இன ரீதியான வேறுபாடே என்பதற்கு எந்த 
ஆதாரமும் இல்லை.
4) தாசர்கள் தஸ்யூக்களிடம் இருந்து ஆரியர்கள் உடலின்
நிறத்தால் வேறுபட்டவர்கள் என்ற கருத்துக்கு வேதங்களில் 
எந்த ஆதாரமும் இல்லை.
"மானுட உடலளவிடும் இயல்" (anthropometry) என்பது 
மனிதர்களின் இனத்தைத் தீர்மானிப்பதற்கான நம்பத்தகுந்த 
அறிவியல் என்றால்,  பார்ப்பனர்களும் தீண்டத்  தகாதவர்களும்  
ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே என்று அதன் அளவீடுகள் 
நிறுவுகின்றன.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பார்ப்பனர்கள் 
ஆரியர்கள் என்றால் தீண்டத் தகாதவர்களும் ஆரியர்களே.
பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தீண்டத் தகாதவர்களும்  
திராவிடர்களே.
(மொழிபெயர்ப்பு:  இக்கட்டுரை ஆசிரியர்)
ஆங்கில மூலம் கீழே காண்க.
My conclusions are:
1. The Vedas do not know any such race as the Aryan race.
2. There is no evidence in the Vedas of any invasion of India by the Aryan race
 and it having conquered the Dasas and Dasyus supposed to be the natives of India.
3. There is no evidence to show that the distinction between Aryans, Dasas and 
Dasyus was a racial distinction.
4. The Vedas do not support the contention that the Aryans were different in colour 
from the Dasas and Dasyus…..If anthropometry is a science which can be depended 
upon to determine the race of a people….. (then its) measurements establish that the 
Brahmins and the Untouchables belong to the same race. From this it follows that 
if the Brahmins are Aryans the Untouchables are also Aryans. 
If the Brahmins are Dravidians, the Untouchables are also Dravidians…..’
(B. R. Ambedkar, ‘Writings and Speeches’ [Bombay: Education Department, Government of 
Maharashtra, 1986-1990], Vol. 7, p. 85 and 302-303, quoted in Koenraad Elst’s Indigneous
Indians, Agastya to Ambedkar, op. cit., p.410-411).
தமிழில் படிக்க விரும்புவோர் 
டாக்டர் அம்பேத்கார் பேச்சும் எழுத்தும் 
தொகுதி-13, 130-ஐப் படிக்கவும்.
ஆகா, ஆரிய திராவிட இனக்கொள்கையானது போலியானது,
பொய்யானது,  கற்பனையானது, இந்தியர்களைப் 
பிரித்தாள ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மோசடியான 
கோட்பாடு என்பதை டாக்டர் அம்பேத்கார்   ஆணித்தரமாகக்
கூறுகிறார்.
***********************************************************    
மானுட உடலவிடும் இயல் (anthropometry) என்றால் என்ன 
என்று வாசகர்கள் அறிந்து கொள்ள வசதியாக,
உயிரியல் அகராதி தரும் விளக்கத்தை முந்திய 
கமெண்டில் கொடுத்துள்ளேன். 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக