சனி, 4 ஆகஸ்ட், 2018

//அகரீதியில் அதாவது ரத்தத்தில் மற்றும் நுண்னுயிர் ரீதியில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுவரை சோதிக்கப்படும் போது அதனை எப்படி புறத்தை மட்டும் அறிகிறது என்று சொல்ல முடியும்?//
தாங்கள் சொல்லும் இந்த சோதனைகளும் புறத்தால் புலன்களால் அறிவதே..இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்களும் ஆய்வகச்சோதனைகளே!
அகத்தை ஆராய்வது என்பது உணர்வுகளில் ஏற்படும் மாற்றம்,மனதில் ஏற்படும் மாற்றம்.. இவற்றை விளக்க உங்களுக்கு ஹோமியோபதியின் தத்துவத்தையே விளக்க வேண்டும்..அதற்கு நீங்களே ஹோமியோபதி தத்துவ நூலை முழுதும் படித்து விடலாம்..
ஹோமியோபதியை உணர மட்டுமே முடியும்.அதற்கு ஆரோக்கியமான மனிதருக்கு கொடுத்து அது ஏற்படுத்திய மாற்றங்களை பதிவு செய்வது ஒன்றே வழி. இதுவே ஹோமியோபதியின் ஆதார விதி..இதை விடுத்து வேறு வழியில்லை..
வீரியப்படுத்தப்பட்ட ஹோமியோபதி நீர்மத்தில் மருந்து உள்ளதா என்பதை கண்டறிய ஹானிமன் பயன்படுத்திய ஒரே வழி அவரே அதை உட்கொண்டு மருந்தின் குணங்களை பதிவு செய்தார்.அவரே 99 மருந்துகளை இது போல உட்கொண்டு அதன் மருத்துவ குணங்களை புத்தகமாக பதிவு செய்தார்.அதுவே ஹோமியோபதி மருத்துவர்களுக்கு அடிப்படையான நூல் ‘மெட்டீரியா மெடிக்கா பூரா’
இதனடிப்படையில் தான் நான் நீங்களே ஆய்வகம் எனக்கூறினேன்.
தங்களுக்கு இன்னும் ஒரு கூடுதல் தகவல்
ஹோமியோபதியின் ஆரம்ப காலகட்டத்தில் ஹோமியோபதியின் வளர்ச்சி ஆங்கில மருத்துவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது..அப்போது அதை போலி அறிவியல் வெறும் கட்டுக்கதை என நிரூபிக்கும் விதத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும் என Leipzig மருத்துவ இதழின் நிறுவனரான பாம்கார்ட்னர்(Baumgartner), தீவிர ஹோமியோபதி எதிர்ப்பாளரான டாக்டர் ஹென்ரிச் ராபியை கேட்டுக்கொண்டார்,ஆனால்
டாக்டர் ராபி தனக்கு இப்போது ஆய்வு செய்ய நேரமில்லை எனக்கூறி தன்னுடைய மாணவரான பல தங்கப்பதக்கங்களை வாங்கிய மிகச்சிறந்த அறிவாளி டாக்டர் ஹெர்ரிங் அவர்களிடம் ஹோமியோபதியை பொய்யான முறை என நிரூபிக்கும் படி கேட்டுக்கொண்டார்.அதற்கு டாக்டர் ஹெர்ரிங் ஒரு வருடம் அவகாசம் கேட்டு முதலில் ஹோமியோபதி புத்தகங்களை(மெட்டீரியா மெடிக்கா ப்யூரா மற்றும் ஆர்கனான் ஆப் மெடிசன் மற்றும் தி கிரானிக் டிஸ்சீசஸ்) முழுதும் படித்தார், முதலில் டாக்டர் ஹானிமன் எழுதிய மெட்டீரியா மெடிக்கா ப்யூரா நூலை படித்தார்,அதில் முதலில் ஹானிமன் எச்சரிக்கை விடுக்கிறார் என்னவென்று,
“The doctrine appeals not only chiefly, but solely to the verdict of experience – ‘repeat the experiments’, repeat them carefully and accurately and you will find the doctrine confirmed at every step’ – and it does what no medical doctrine, no system of physic, no so-called therapeutics ever did or could do, it insists upon being judged by the result.”
ஹெரிங் ஹானிமனின் சவாலை ஏற்று ஹானிமன் முதன்முதலில் நிரூபணம் செய்த மருந்தான சின்கோனாவை உட்கொண்டு விளைவுகளை குறிக்கிறார்.ஆனால் விளைவுகள் ஹானிமன் நிரூபித்ததாகவே இருக்கிறது. பின்னர் டாக்டர் ஹெர்ர்ங் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கிறார்
ஹோமியோபதி மட்டுமே எதிர்காலத்திற்கான மருத்துவம் என்று “De Medicine Future” (The Medicine of Future).அதற்கு பின் டாக்டர் ஹெர்ரிங் அலோபதி பட்டம் துறந்து முழுமையான ஹோமியோபதி மருத்துவராக மாறி ஹோமியோபதியின் கிரீடங்களில் ஒருவராக மாறினார்..
இது நடந்தது 1825களில்..
ஆனால் வெற்று விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன
----------------------------------
செறிவுக்குறைக்க குறைக்க வீரியம் அதிகரிக்கும் என்ற ஹோமியோதியின் அடிப்படை வழிகாட்டும் கோட்பாட்டுக்கும் அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு தான் விவாதத்திற்குரிய பொருள்.
அறுதியற்று, எல்லையற்று செறிவைக் குறைத்தாலும் அதில் மூல மூலக்கூறு இருக்கும், அது சாதாரண தண்ணீர் இல்லை என்ற ஹோமியோபதியின் கோட்பாடு அவகட்ரோ எண் / விகிதம் என்ற வேதிஅறிவியலின் அடிப்படை கோட்பாட்டுடன் முரண்படுகிறது. இந்த முரணுக்கு தான் விளக்கம் தேவை.
300 ஆண்டுகளுக்கும் முன்னர் நிறுவப்பெற்ற வேதியல் கோட்பாடு தவறு என்கிறீர்களா? அப்படி தவறென்றால், அதை அடிப்படையாகக் கொண்டும், தொடர்ந்தும் வந்த பல அறிவியல் வளர்ச்சிகளும் தவறு என்றாகிவிடும்.
===============
கட்டுரையை இந்த லிங்கில் பார்க்கலாம்.
--------------------------------------------
அறிவியல் கோட்பாடுகள் என்றால் என்ன என்பதன் விளக்கத்தை இங்கு காணலாம். https://annatheanalyst.blogspot.co.nz/2012/10/theory.html
----------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக