சனி, 18 ஆகஸ்ட், 2018

வானத்தில் அந்தரத்தில் 160 அடி உயரம் பறந்த
கோவை மாஜிக் நிபுணர் விக்னேஷ் பிரபு
பறந்தது எப்படி? ரகசியத்தை உடைக்கிறோம்!
Kovai Magician (Flying Man) DEBUNKED!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
1) கோவை மாஜிக் நிபுணர் இளைஞர் விக்னேஷ்
 பிரபுவை மனசாரப் பாராட்டுகிறோம்.

2) நியூட்டன் அறிவியல் மன்றம் எப்போதுமே
மாஜிக் கலையையும் மாஜிக் நிபுணர்களையம்
ஆதரித்து வந்திருக்கிறது. தொழில்முறையில்
அல்லாமல், சிறிய அளவிலான மாஜிக்குகளை
இன்றுவரை நியூட்டன் அறிவியல் மன்றம்
செய்து காட்டி வருகிறது.

3) விக்னேஷ் பிரபுவின், 160 அடி உயரத்தில்
வானில் பறந்த நிகழ்வு வழக்கமான மாஜிக்
தந்திரங்களையும்  தொழில்நுட்பத்தையும்
பயன்படுத்திச் செய்யப்பட்டது.

4) அதில் மனதின் சக்திக்கோ, மனம் சார்ந்த
செயல்களுக்கோ துளியும் இடமில்லை.
அது முற்ற முழுக்க ஒரு இயற்பியல் நிகழ்வு.
(PHYSICAL EVENT).

5) நியூட்டனின் இயக்கம்  பற்றிய மூன்று
விதிகளை (Newton's laws of motion) நாம் நன்கறிவோம்.
அதில் முதலாம் விதியை நினைவு கூருங்கள்.
வெளிச்சக்தியின் தலையீடு இல்லாதவரை
ஓய்வில் உள்ள ஒரு பொருள் தொடர்ந்து
ஓய்விலேயே இருக்கும்.
(An object at rest will continue to be at rest unless acted upon
by an external force).

6) விக்னேஷ் பிரபு ஒரு மொட்டை மாடியில்
நின்று கொண்டிருக்கிறார். அப்படி நின்று
கொண்டிருந்தவர் திடீரென்று பறக்கிறார்.
அப்படியானால், அவரின் இந்த நிலை
மாற்றத்துக்கு (change of state) கண்டிப்பாக ஒரு
வெளிச்சக்திதான் காரணமாக இருக்க முடியும்.
அந்த வெளிச்சக்தி எது? பார்ப்போம்.

7) அவரின் உடலின் மொத்த எடையையும்
கட்டுப்படுத்தும் விதத்தில் மெல்லிய
உறுதியான உலோகக் கயிறுகள் அவர்
உடலில் கட்டப்பட்டன. அக்கயிறுகள் கிரேன்
(crane) போன்ற ஒரு  எந்திரத்துடன் பிணைக்கப்
பட்டன.

8) அதிக உயரத்துக்கு பொருட்களைத்
தூக்கவல்ல கிரேன் போன்ற எந்திரத்தின் மூலம்
விக்னேஷ் பிரபு அந்தரத்தில் தொங்கினார்.
இதைத்தான் வானில் பறந்ததாக அவர்
கூறுகிறார். ஆக விக்னேஷ் பிரபுவைப்
பறக்க வைத்த வெளிச்சக்தி ஒரு கிரேனாக
இருக்கக் கூடும்; இருக்க வேண்டும்.

9) விக்னேஷ் பிரபு வானில் பறந்த நேரம் நல்ல
மத்தியான நேரம். வானத்தில் எங்கு பார்த்தாலும்
வெண்மேகங்கள் இருப்பதால் அது உச்சி வெயில்
நேரமே. இது அவர் வெளியிட்ட வீடியோ மூலம்
தெரிகிறது. வெண்மேகங்கள் மட்டுமே வானில்
இருக்கும் நேரத்தில், சூரிய ஒளியின் அதிகமான
பிரகாசத்தில், அவரின் உடலில் கட்டப்பட்ட
கயிறுகள் பார்ப்பவர்களின் கண்ணுக்குத்
தெரியாது. காமிராவிலும் விழாது.

10) அதிகாலை அல்லது மாலை நேரத்தில் வானம்
நீல நிறமாகவும் ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.
மேகமூட்டம் இருந்தால் கருமேகங்கள் வானில்
அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் எந்த மாஜிக்
நிபுணரும் வானில் பறக்க மாட்டார். ஏனெனில்
அவரின் உடலில் கட்டப்பட்ட கயிறுகளை
வானம் காட்டிக் கொடுத்து விடும்.

11) கோவையில் நிறையக் கல்லூரிகள் உள்ளன.
இயற்பியல் மாணவர்கள், பேராசிரியர்கள்,
ஆராய்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
இயற்பியல் பேராசிரியர்களுக்குத் தகவல்
அளித்து, அவர்கள் முன்னிலையில் அல்லவா
விக்னேஷ் பிரபு பறந்திருக்க வேண்டும். ஆனால்
அவர் அப்படிச் செய்ய முன்வரவில்லை.
அவருடைய ரகசியம் அம்பலமாகி விடும்
என்ற பயமே அதற்குக் காரணம்.

12)   ஒருவேளை கிரேன் எந்திரத்தை அவர்
பயன்படுத்தவில்லை என்றால், "காந்தத்
தூக்கல்" எனப்படும் மேக்னெட்டிக் லெவிட்டேஷன்
(magnetic levitation) தொழில்நுட்பத்தில் செயல்படும்
ஏதேனும் ஒரு கருவியை அவர் பயன்படுத்தி
இருக்க வேண்டும்.

13) ஜெயலலிதா மோனோ ரயில் திட்டத்தைக்
கொண்டு வர முயன்றார் அல்லவா? மோனோ
ரயில் மாக்னெட்டிக் லெவிட்டேஷன்
தொழில்நுட்பத்தில் இயங்குவது. அது ஒற்றைத்
தண்டவாளத்தில் செல்லும் ரயில்.

14) அநேகமாக 70 கிலோ எடையுள்ள விக்னேஷ்
பிரபு, 160 அடி உயரம் பறப்பதானால்,
வலிமையான காந்தப்புலத்தை உருவாக்க
வேண்டும்.  இதற்கு அதிகமான டெஸ்லா (Tesla)
அளவைக் கொண்ட காந்தப்புலம் தேவைப்படும்.
இது அதிகச் செலவாகும்.

15) எனினும், ஒரு பொருளை அதாவது மனிதனை
தேவையான உயரத்திற்குத் தூக்கும்
ஏதேனும் ஒரு கருவியின் உதவி இல்லாமல்
யார் எவராலும் வானில் பறக்க இயலாது.
இதை அறிவியல் உறுதிபடக் கூறுகிறது.

16) எனவே விக்னேஷ் பிரபு
கிரேன் அல்லது அது போன்ற உயரத்
தூக்கும் ஒரு கருவியின் உதவி இல்லாமல்
வானத்தில் அந்தரத்தில் தொங்கிக்
கொண்டு 160 அடி உயரம் சென்று திரும்ப
முடியாது. இது உறுதி. உறுதியிலும் உறுதி!

17) இதில் மனதின் சக்திக்கோ மென்டலிசம்
என்ற அபத்தத்துக்கோ இடமில்லை.
அறிவியலைப் பயன்படுத்திப் புகழ் பெறும்
விக்னேஷ் பிரபு போன்ற சாதனையாளர்கள்
அறிவியலுக்கு எதிரான, பிற்போக்கான
கருத்துக்களைக் கூறக்  கூடாது.
*************************************************

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விக்னேஷ் பிரபு
(மாஜிக் நிபுணர்) நியூட்டன் அறிவியல்
மன்றத்துக்கு பேட்டி தருவாரா? .மாட்டார்.
ஏனெனில் இரண்டே கேள்விகளில் சகல
உண்மைகளையும் நியூட்டன் அறிவியல்
மன்றம் வெளிக் கொண்டுவந்து விடும்.

மாஜிக் என்பது அறிவியல் தொழில்நுட்பம்
சார்ந்தது. தொழில்நுட்பம் இல்லாமல்
மாஜிக் இல்லை. எனவே அறிவியல்
தொழில்நுட்பத் துறையினருக்கு அறிவித்து
அவர்கள் முன்னிலையில்தான் வானில் பறக்கும்
நிகழ்வை விக்னேஷ் பிரபு நடத்தி இருக்க
வேண்டும். ஆனால் இந்நிகழ்வை அவர்
ஒத்திகை பார்க்கும் நிகழ்வாக (rehearsal)
கருதியுள்ளார். எனவே தன்னுடைய ஆட்களை
மட்டும் வைத்துக்கொண்டு பறந்து காட்டி
விட்டார்.

இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ ஒரு மாஜிக்
நிபுணர் உருவாவது பெருங்கஷ்டம். தன் சொந்த
முயற்சி, உழைப்பு, ஆற்றல், தன்னம்பிக்கை
ஆகியவற்றால்தான் ஒரு மாஜிக் நிபுணர்
உருவாகிறார். அவரின்  உருவாக்கத்தில்
சமூகத்திற்கு எப்பங்கும் இல்லை.

எனவே மாஜிக் நிபுணர்களின் மீது
எதிர்மறையான பார்வை ஏற்படும் விதத்தில்
நியூட்டன் அறிவியல் மன்றம் செயல்படுவதில்லை.

முற்றிலுமாக அறிவியலுக்குக் கடன்பட்டுள்ள
விக்னேஷ் பிரபு, அறிவியலுக்கு எதிரான
பிற்போக்கான கருத்துக்களைச் சொல்லி
சமூகத்தைப் பின்னுக்குச் செலுத்த வேண்டாம்
என்பதே எமது வேண்டுகோள்.


பல ஆண்டுகளுக்கு முன்பு, கொல்கொத்தாவில்
நடைமேடையில் நின்றுகொண்டிருந்த ஒரு
ரயிலை, பார்த்துக் கொண்டிருந்தவர்களின்
கண் பார்வையில் இருந்து மறைத்துக்
காட்டினார் மாஜிக் நிபுணர் சர்க்கார். இதை
அன்றைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு
முன்னிலையில் செய்து காட்டினார் அவர்.
சர்க்காரைப் போல விக்னேஷ் பிரபுவும்
எதிர்காலத்தில் வளர வேண்டும்.

இவர்தான் இனி கலைஞர்!
கலைஞர் வாழ்கிறார்!


விக்னேஷ் பிரபு வணிக ரீதியான ஒரு
மாஜிக் நிபுணர். எனவே குறைந்த செலவில்
கிடைக்கும் தொழில்நுட்பத்தை மட்டுமே
அவரால் பயன்படுத்த இயலும். அறிவியல்
அறிஞர்கள் கஸிமிர் விசை (Cassimir force)
பற்றியும், ஒளிவை விட வேகமான நிலையை
அடைவது பற்றியும் பெருத்த செலவில்
ஆராய்ச்சி நடத்துவார்கள். அவற்றையெல்லாம்
மாஜிக் நிபுணர்கள் பயன்படுத்த வேண்டுமெனில்,
அவை குறைந்த செலவிலான தொழில்நுட்பமாக
மாறியிருக்க வேண்டும். 

உலகில்  அநேகமாக எல்லா மாஜிக்
நிபுணர்களும் கிரேன் எந்திரத்தைப்
பயன்படுத்தியே வானில் 'பறந்து'ள்ளார்கள்
என்று தெரிய வருகிறது.எனவேதான் கிரேன்
என்பதற்கு அதிகமான நிகழ்தகவு உள்ளது என்று
கருதுகிறேன்.

பாராச்சூட் என்பது உயரத்தில் (high altitude)
இருந்து குதிப்பதற்கானது.
அதைக் கீழே இருந்து take off செய்து
மேலே பறப்பதற்குப் பயன்படுத்த இயலாது.

கண்ணாடி முலாம் பூசப்பட்ட ஹீலியம் பலூன்
என்றால், அது தரையில் இருந்து மேலே
ஏறும்போது காட்டிக் கொடுத்து விடும் அல்லவா?
விக்னேஷ் பிரபுவின் வீடியோவில் தரையில்
இருந்து மேலே ஏறும் நிகழ்வு close up காட்சியாக 
உள்ளதே.

ஆக வட்டம் விரிந்து கொண்டே போகிறது.
வட்டம் சுருங்கினால்தான் துல்லியமாகத்
தீர்மானிக்க முடியும்.
       


  







    

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக