வெள்ளி, 23 அக்டோபர், 2015

எந்த நிலையிலும் இந்த அராஜகத்தை ஏற்க முடியாது!
------------------------------------------------------------------------------------
ஹுசங்கி பிரசாத் என்னும் 23 வயது தலித் இளைஞர் கர்நாடக 
மாநிலம் தாவண்கரே பல்கலைக் கழக மாணவர்.
இவர் கடந்த ஆண்டு (2014) சாதிய முறையைக் கண்டித்து 
ஒரு நூல் எழுதினர். 

இவர் தங்கி இருக்கும் பல்கலை SC/ST விடுதிக்குச் சென்ற சிலர் 
அவரைத் தந்திரமாக வெளியே கூட்டி வந்து அடித்து உதைத்து 
விட்டுச் சென்றனர். இந்து மதத்தைப் பற்றியா இழிவாக 
எழுதுகிறாய் என்று கூறிக்கொண்டே அவரைத் தாக்கி 
உள்ளனர்.

காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 
குற்றவாளிகளில் ஒருவன் கூடப் பிடிபடவில்லை.

இந்த நாடு வாழத் தகுதியற்ற நாடாக ஆகி வருகிறது.
----------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக