வெள்ளி, 16 அக்டோபர், 2015

பாரதிய ஜனதாவில் சேருகிறார் பெருமாள் முருகன்ஜி?!
ஹெச் ராஜா சூசகம்!!
-----------------------------------------------------------------------------------
சர்வதேச அளவில் புகழ் பெற்றவர் பெருமாள் முருகன்!
மாதொருபாகன் என்ற தமது நாவல் மூலமாக கடந்த
ஆண்டு சர்ச்சைக்கு உள்ளானவர்.

இந்தப் பெருமாள் முருகன் விரைவில் பாஜகவில் சேருவார்
என்று பாஜக தேசியத் தலைவர் திரு ஹெச் ராஜா சூசகமாக
தெரிவித்ததாக கமலாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதுல அதிர்ச்சி அடைய என்னங்க இருக்கு? அடுத்த
ஜோ டிக்குரூஸ் பெருமாள் முருகன்ஜி தானே!ஆழிசூழ் உலகு
என்ற நாவலை எழுதிய ஜோ டிக்குரூஸ் என்ற பிரபல
எழுத்தாளர் பாஜகவை ஆதரிக்கவில்லையா?
ஜோ டிக்குரூசைத் தொடர்ந்து பெருமாள் முருகன்ஜியும்
பாஜகவில் சேருவார் என்று நாங்கள் உறுதியாகக்
கூறுகிறோம். இதற்கான ஏற்பாடுகளை ராஜாஜி செய்து
வருகிறார் என்றார் கமலாலய அன்பர்.
( இங்கு ராஜாஜி என்பது ஹெச் ராஜாவைக் குறிக்கும்)

கடந்த வாரம்தான்  பெருமாள் முருகன்ஜி சாகித்ய
அகாடமியின் உயர்ந்த விருதான சமன்வே பாஷா சமன்
என்ற விருதைப் பெற்றார்.

கார்ப்போரேட் எழுத்தாளரான  பெருமாள் முருகன்ஜி
கார்ப்பொரேட் பிரதமரான மோடிஜியை ஆதரிப்பார்
என்றால், இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லைதான்.

ராஜாஜி, முருகன்ஜி, நல்லகண்ணுஜி, ஜெயமோகன்ஜி,
தாபாண்டியன்ஜி, எச்சூரிஜி, மோடிஜி!!!!!!
எல்லா ஜிக்கும் போடுங்கய்யா ஒரு ஜிந்தாபாத்!    
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக