வெள்ளி, 16 அக்டோபர், 2015

தமுஎகச எழுத்தாளர்களுக்கு சாஹித்ய விருது!
ஹெச் ராஜா  தீவிர முயற்சி!
தமுஎகசக்காரா நம்மவா, அவாள அட்டாக் 
பண்ணாதீங்கோ!  ஹெச் ராஜா உத்தரவு!
------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: இந்தப் பதிவு 2015 அக்டோபாரில் 
எழுதியது. நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக 
எழுத்தாளர்கள் சாஹித்ய விருதுகளைத் திருப்பிக் 
கொடுத்த நிலையில் ஹெச் ராஜா  பேசியது.  

"மானங்கெட்ட பயலுக 41 பேரு இதுவரை சாகித்ய அகாடமி 
விருத திருப்பிக் கொடுத்து சரஸ்வதிய அவமானப் படுத்தி 
இருக்கான். தமிழ் நாட்ல கம்யூனிஸ்ட் எழுத்தாளன்தான் 
அதிகமா விருது வாங்கியிருக்கான். கம்யூனிஸ்ட்காரன் 
எவனாவது திருப்பிக் கொடுத்துருவானோ ன்னு  
பயந்துக்கிட்டே இருந்தோம். ஆனா ஒரு கம்யூனிஸ்ட் கூட திருப்பிக் கொடுக்கல.

இதனால  நமக்குத்தான் ஆதாயம். ஆகையினால நம்ம 
ஆள்க்கள் யாரும் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள அட்டாக் 
பண்ணிப் பேசாதீங்கோ! எழுதாதீங்கோ! அவா நம்மவா!
அவா ஒருநாளும் விருத திருப்பிக் கொடுக்க மாட்டா!

அவாள்ள யாருக்காவது ஒரு விருதக்  கொடுத்து 

மடக்கிப் போட்டா என்ன என்று ஒரு ஆலோசனையை 
முன்வைத்தார் அருகில் இருந்த காவி ஒருவர்.

அதுவும் நல்ல யோசன தான். ஆத்தர் பேரு, புக் பேரு
எல்லாத்தயும் எழுதி நான் டெல்லி போறபோது 
குடுங்க என்றார் ஹெச் ராஜா. 
****************************************************************   
பின்குறிப்பு: இந்தப் பதிவைப் படித்தபின் நம்மைத் 
தொடர்பு கொண்ட ஒரு தமுஎகச தோழர், கவிஞர் 
ஆதவன் தீட்சண்யாவுக்கு ஹெச் ராஜா விருது 
வாங்கிக் கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  
--------------------------------------------------------------------------------------------------------             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக