புதன், 14 அக்டோபர், 2015

தமிழகத்துக்கு மோடி பாராட்டு! ஹெச் ராஜா பெருமிதம்!!
கமலாலயத்தில் ஆனந்தக் கூத்து!!!
ரோட்டில் போகிறவனுக்கு எல்லாம் இனிப்பு!!
----------------------------------------------------------------------------------------
சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர்கள்
சுமார் 30 பேரில் ஒருவர்கூட விருதுகளைத் திருப்பிக்
கொடுக்க முன்வரவில்லை என்பதற்காக மோடி அவர்கள்
தமிழிசை அம்மையாரையும் ஹெச் ராஜா அவர்களையும்
பாராட்டி உள்ளாராம்.

தமிழ்நாட்டில் இடதுசாரி எழுத்தாளர் என்று ஒருவர்கூட
கிடையாது என்று பெருமிதம் பொங்க ஹெச் ராஜா
மோடியிடம் கூறி உள்ளாராம்.

இதற்கு இடம் தரலாமா? யாராவது ஒரு எழுத்தாளராவது
விருதைத் திருப்பிக் கொடுத்து இருந்தால், பாஜக
இப்படிக் கொட்டம் அடிக்குமா?

மோடி பாராட்டியதைத் தொடர்ந்து கமலாலயத்தில்
ஒரே இனிப்பு மாயம். ரோட்டில் போகிறவனைக்கூட
வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வாயில் லட்டு
உருண்டையைத் திணித்து அனுப்புகிறார்கள்


நமக்கு கோபம் கோபமாக வருகிறது. வந்து என்ன
பிரயோஜனம்? இந்துத்துவ இடதுசாரிகளை வைத்துக்
கொண்டு, பாஜகவின் முகத்தில் கரி பூச முடியுமா?
யாராவது ஒருவர் விருதைத் திருப்பிக் கொடுத்து
இருந்தால் ஹெச்.ராஜா இப்படிக் கொக்கரிக்க முடியுமா?
********************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக