செவ்வாய், 20 அக்டோபர், 2015

தன்  மகன் டேவிட் ஜவஹருக்கு பல்கலைப் 
பதவி பெறுவதற்காக அம்மாவுக்குப் பல்லக்குத் தூக்கிய 
ஒருவரின் தலைமையில் இயங்கும் கட்சியில்
உள்ள தோழர் கட்சி கட்டுதலில் என்ன புதிய அனுபவங்களை 
அடைந்து விட முடியும்? அருள்கூர்ந்து புரட்சிகரப் பணிகளில் 
தங்கள் வாழ்க்கையையும் சுகங்களையும் தொலைத்த 
ஆயிரக் கணக்கான புரட்சியாளர்களை சந்திரகுமாரைப் 
பயன்படுத்தி இழிவு செய்ய வேண்டாம்.
**  
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது எங்கள் கல்லூரியில் 
தா பா பேச வந்தபோது, அந்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழில் 
தா பா, ஆசிரியர், மறவர் முரசு என்று குறிப்பிட்டு இருந்ததை 
நாங்கள் அறிவோம். ஒரு பிழைப்புவாதியின் தலைமையில் 
இயங்கி, மொத்தக் கட்சியுமே பிழைப்புவாதக் கட்சியாகிப்
போன பிறகு, அந்தக் கேடுகெட்ட கட்சியில் இயங்கிய 
ஒருவரின் அனுபவம், அவர் நல்லவராக இருந்த போதிலும்,
எவ்விதத்திலும் கோட்பாட்டு ரீதியான பங்களிப்பைத் 
தந்து விடாது.
**
UG party அல்லது semi UG partyயில் களப்பணி ஆற்றிய 
ஒருவரால்தான் கட்சி கட்டுதல், கட்சி இயங்குதல் 
குறித்து கருத்துச் சொல்ல முடியும். அந்த அருகதை 
அவர்களுக்கு மட்டுமே உண்டு.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக