செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஆர்.எஸ்.எஸ், பாஜகவை இந்துத்துவக் கட்சிகள் 
என்று சொல்வது நியாயம் அல்ல!
நாங்கள்தான் உண்மையான இந்துத்துவக் கட்சி!
மார்க்சிஸ்டுகளின் மனக் குமுறல்!
--------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-----------------------------------------------------------------------------------------  
இந்தப் படத்தில் உள்ளவரைத் தெரிகிறதா? இவர் இந்தியாவின் 
ஒரு முக்கியமான பதவிக்கு செலெக்ட் ஆகியுள்ளவர்.
கேரளத்தைச் சேர்ந்த இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் (CPM) 
மாணவர் அமைப்பான SFI (Student Federation of India) அமைப்பில் 
பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

இவர் பெயர் சங்கரன் நம்பூதிரி. வயது 47. சங்கனாச்சேரியில் 
உள்ள NSS இந்துக் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் 
பட்டம் பெற்றவர்.

தற்போது, இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலின் தலைமை
அர்ச்சகராக செலெக்ட் பண்ணப் பட்டுள்ளார். வரும் நவம்பர் 17
முதல் தொடங்கும் ஐயப்பன் சீசனில் இவரே தலைமைப் 
பூசாரியாக இருப்பார்.

இவரின் தனிச் சிறப்பு என்னவெனில், இவர் மேற்கூறிய 
இந்துக் கல்லூரியில் மாணவராக இருக்கும்போதே, 
புரட்சிகர மார்க்சிய மாணவர் சங்கமான SFIயில் பதவி 
வகிக்கும்போதே,  கோவில் அர்ச்சகராக இருந்தவர்.
ஆம், சங்கனாச்சேரி பெருன்னாவில் உள்ள வாசுதேவபுரம் 
கோவிலில் அர்ச்சகராக இருந்தவர்.

ஒரே நேரத்தில் கோவில் அர்ச்சகராகவும் புரட்சிகர SFI 
மாணவர் சங்கத்தில் பொறுப்பாளராகவும் இருப்பது 
மார்க்சிஸ்ட்களால் மட்டுமே முடியும்.

இவரைப் போன்றவர்களுக்கு இருக்கும் ஒரே வருத்தம் 
இதுதான். ஆர்.எஸ்.எஸ், பாஜகவை மட்டும் இந்துத்துவ 
சக்திகள் என்று சொல்கிறார்களே, இது நியாயமா, எங்களை 
அல்லவா சொல்ல வேண்டும்! ஆம், CPM கட்சியே 
உண்மையான இந்துத்துவக் கட்சி!
-------------------------------------------------------------------------------------------------------
போலிக் கம்யூனிஸ்ட்களை முறியடிப்போம்!
மெய்யான  கம்யூனிசத்தை நிலைநாட்டுவோம்!

**********************************************************************
    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக