வெள்ளி, 17 ஜூன், 2016

உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா இரும்பொறை (A-19)
என்பவரை கொலைச் சதியில் இருந்து விடுவிக்கிறார்.
அதன்படியே அவர் 1999இல் விடுதலையாகி சுதந்திரப்
பறவை ஆகிறார். ஆனால் அதே நீதியரசர் வாத்வா
பேரறிவாளனை கொலைச் சதியில் இருந்து
விடுவிக்கவில்லை. தண்டித்து விடுகிறார்.  

இரும்பொறையும் பேரறிவாளனும் சேர்ந்துதான்
ரகசியமாக யாழ்ப்பாணம் சென்றனர். தேசியத்
தலைவரைச் சந்தித்தனர். தமிழ்நாடு திரும்பினர்.
ஆனால் இரும்பொறை விடுதலை ஆகக் காரணம்
அவர் மீது வெடிகுண்டுக்கான பாட்டரி  வாங்கிக்
கொடுத்த குற்றம் கிடையாது.


இந்த நிகழ்வுக்கு அப்புறம்  நான் டாக்டர் ஆனந்த்
அவர்களுடனோ கத்தோலிக்க மத நிறுவனத்துடனோ
எவ்விதத் தொடர்பையும் பேணவில்லை. மயிலைப்
பேராயரும் டாக்டர் ஆனந்த் அவர்களும் அப்போதைய
தமிழக அரசில் நிரம்பவும் செல்வாக்குப் பெற்றவர்களாக
இருந்தார்கள். "என்ன உதவி வேண்டுமானாலும்
தயங்காமல் என்னிடம் வாருங்கள்" என்று டாக்டர்
ஆனந்த் அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். அவருக்கு
நன்றி கூறி விடைபெற்றேன். அவ்வளவுதான்,
அந்தத் தொடர்பை அத்தோடு விட்டு விட்டேன்.
காலப்போக்கில் என்னுடைய மொபைலில் இருந்த
அவரின் தொலைபேசி எண்களையும் நீக்கி விட்டேன்.

ஒரு சராசரி குட்டி முதலாளித்துவ நபர் என்றால்,
இப்படி ஒரு பெரிய இடத்துத் தொடர்பு கிடைத்தால்
அதைப் பேணி வளர்ப்பார்கள். தக்க சமயத்தில் அணுகி
உதவி கேட்டுப் பெறுவார்கள். ஆனால் மார்க்சிய
லெனினியவாதிகள் அப்படிச் செய்வதில்லை.    

சினேஹா போன்ற அமைப்புகளைப் பற்றிய
அறிதல் சமூகத்திற்கு அவசியம். மனநல ஆலோசகர்,
தற்கொலை தடுப்பு ஆலோசகர் என்று பகிரங்கமாக
போர்டு மாட்டிக் கொண்டு நீங்கள் வேலை செய்தல்
வேண்டும். இதெல்லாம் இன்றையத் தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக