ஞாயிறு, 26 ஜூன், 2016

நான்கு முறைகளில் எது எளிமையானது?
வாசகர்கள் கூறுமாறு வேண்டுகிறோம்!
--------------------------------------------------------------------------
மென்பொறியாளர் திரு வேல்முருகன் இப்பதிவில்
ஓர் 28 இலக்க எண்ணை நான்கு முறைகளில் கூறுகிறார்.
இந்த 4 முறைகளில் எது சிறந்தது, எளிமையானது என்று
வாசகர்கள் கருத்துத் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
எமது தாழ்மையான கருத்து இதோ!

முறை-1: பத்திலட்சங்கோடியே நாநூற்று இருபதுகோடியே 
ட்டுகோடியே பத்திலட்சத்து எண்பத்தெட்டு.
விமர்சனம்: இம்முறையில் கோடி என்ற சொல்
மீண்டும் மீண்டும் வந்து குழப்புகிறது.

முறை-3: ஓர் ஒன்பதுமடியாயிரத்து நாற்பத்திரண்டு ஐமடியாயிரத்து 
எட்டு கோடியே இருமடியாயிரத்து எண்பத்தெட்டு

இம்முறையிலும்  மடி, ஆயிரம் ஆகிய
சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து குழப்புகின்றன.

முறை-4: ஒரு மெய்யிரத்தாம்பலே நாற்பத்திரண்டு நெளையே 
எட்டு கோடியே மெய்யிரத்து எண்பத்தெட்டு

இங்கும் ஆம்பல், நெளை ஆகிய சொற்களின்
பொருள்  தெரியாமல் மாணவர்கள் குழம்பக்கூடும்.

முறை-2: ஓர் எண்மகத்து நாற்பத்திரண்டு நாவகத்து 
எட்டு கோடியே எண்ணத்து எண்பத்தெட்டு

இருக்கும் நான்கு முறைகளில் இதுவே
எளிமையானதாகவும், சுலபத்தில் பொருள்
விளங்குவதாகவும், ஆங்கிலத்தோடு ஒத்திசைவு
உள்ளதாகவும் இருக்கிறது. எனவே பொதுமக்களை
பொறுத்தமட்டில்இதுவே பின்பற்றத் தக்கது.

எமது இக்கருத்து சரிதானா? கருத்துக் கூறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக