வெள்ளி, 24 ஜூன், 2016

உலகின் மிக மோசமான பிறழ் புரிதல் இந்தப்
பின்னூட்டம். இந்தப் பதிவு திராவிட இயக்கத்தின்
ஒட்டு மொத்தமான பங்களிப்பு குறித்த பதிவே அல்ல.
தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கமானது சமூகத்
தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் ஆற்றிய
முற்போக்கான பாத்திரம் மார்க்சியத்தால்
அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
**
இந்தப் பதிவு திராவிட இயக்கத்தின் பெரியாரின்
கடவுள் கொள்கை என்ற ஒற்றைப் பொருள் பற்றி
மட்டுமே பேசுகிறது. மீண்டும் ஒவ்வொருவரும்
மனதில் இருத்திட வேண்டும். இங்கு பேசப் படுவது
பெரியாரின் கடவுள் கொள்கை மட்டுமே.மட்டுமே.


பெரியார் என்றாலே பார்ப்பன எதிர்ப்பு என்று
பொருள். பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி,
வெற்றி அடைந்தவர் பெரியார். இதை எவராலும் மறுக்க
முடியாது. தாம் வாழ்ந்த காலத்திலேயே தாம்
முன்னெடுத்த கொள்கையில் வெற்றி பெற்றவர்கள்
உலகில் வெகு சிலரே. அதில் பெரியாரும் ஒருவர்.
**
ஆனால் கடவுள் கொள்கையில் பெரியார் தோல்வி
அடைந்தார். காரணம் அவரின் கடவுள் கொள்கை
அறிவியல் வழியில் உண்டாக்கப் பட்டது அல்ல.


இந்தக் கட்டுரை ஒருநாள் இரவில் எழுதப் பட்டதல்ல.
இது 30 ஆண்டுகளின் இயக்கப் பணிகள், செயல்பாடுகள்,
அனுபவங்கள், அவற்றின் பகுப்பாய்வுகள் ஆகிய
எல்லாவற்றின் தொகுப்பு. இதை புரிந்து கொள்ள
இயக்கரீதியான அனுபவங்களும், செயல்பாடுகளும்,
பகுப்பாய்வும் தேவை. தினத்தந்தியில் ஒரு பக்கத்தை
வாசித்து விட்டுப் போவது போன்றதல்ல எமது
கட்டுரையை வாசித்துப் புரிந்து கொள்வது.
**
இந்துத்துவம் அறிவுத்தளத்தில் எங்கெல்லாம்
தலைதூக்குகிறது, அங்கெல்லாம் அதை
அடித்துப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரே
அமைப்பு இன்று தமிழ்நாட்டில் நியூட்டன்
அறிவியல் மன்றமே. இந்தப் பணியில் பெரும்
தடையாக இருப்பது பெரியாரிய மூட நம்பிக்கைகளே.


எனவேதான் சொல்கிறோம் அவரின் நாத்திகம்
போலி நாத்திகம் என்று. அதைத் தவிர வேறு எதையும்
நானோ இக்கட்டுரையின் மூல கர்த்தாவான
வைரமுத்துவோ சொல்லவில்லை.

தமிழகத்தில் ஏது ஆம் ஆத்மீ?


-------------------------------------------------------------------------
இது என் அபிப்பிராயம் அல்ல ஐயா. தமிழ்
இலக்கணப்படி சில்லறை என்றால் சில்லுச்
சில்லாக அறுத்தல் என்ற பொருளில் தோன்றிய
சொல். தேங்காய்ச் சில்லு என்றெல்லாம் சொற்கள்
நெல்லை மாவட்டத்தில் உண்டு.
எனக்கு கற்றுக் கொடுத்த தமிழாசிரியர்கள்
மற்றும் பேராசிரியர்கள் கற்பித்த விஷயம் இது.
**
நன்கு கவனிக்கவும். சில்லுச் சில்லாக அறுத்தல்
என்பது துண்டு துண்டாக உடைத்தல் என்ற
பொருளைத் தரும். சில் என்ற அறை என்று
யாரும் பொருள் கொள்ளவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக