வியாழன், 30 ஜூன், 2016

இயற்றமிழ் என்பது இயல்பான தமிழ் என்று
பொருள் தரும். இயல்பான  எழுத்தும் பேச்சுமே
இயற்றமிழ் எனப்பட்டன. சற்று முயற்சி எடுத்தால்தான்
இசையும் நாடகமும் செய்ய முடியும். எனவே இயல்பாக
எந்த வித முயற்சியும் இன்றி உருவான தமிழ்
இயற்றமிழ் என்றும், முயற்சிக்குப் பின் வருகிற
தமிழாக இசையும் நாடகமும்   கருதப் பட்டன.
**
இன்று அறிவியல் இயல்பான ஒன்றாக இல்லை.
அதைக் கற்கவும், வெளிப்படுத்தவும் தனிச் சிறப்பான
முயற்சிகள் தேவைப் படுகின்றன. அறிவியல் தமிழ்
இயல்பானதாக இல்லை. பெரும் பெரும் முயற்சிகளைக்
கோருகிறது. எனவே அதை எப்படி இயற்றமிழில்
அடக்க முடியும்? தனிச்சிறப்பான ஒன்றைப்
பொதுவான ஒன்றாகக் கருதுவது சரியல்ல.
**
அறிவியலை விளக்குவது என்பது வெறும்
உரைநடையுடன் முடிந்து போகிற விஷயம் அல்ல.
எனவே நான்காம் தமிழ் தேவை. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக