புதன், 29 ஜூன், 2016

இசையும் நாடகமும் ஒன்றுக்கொன்று மிக மிக
நெருக்கமானவை. நாடகத்தில் இசை அடங்கும்.
இசையில்லா நாடகம் இல்லை. எனினும்,
தேவை கருதி இசைத்தமிழ் என்றும் நாடகத் தமிழ்
என்றும் தனிப் பிரிவுகளை  ஆக்கி இருந்தனர்
நம் முன்னோர்.
**
இன்று கால மாற்றத்தின் விளைவாக, அறிவியல்
மிகவும் அசுரத் தனமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அதைத் தமிழில் சொல்ல வேண்டும். தமிழை
அறிவியலுக்கு ஏற்ற மொழியாக மாற்றி அமைத்திட
வேண்டும் என்ற தேவை இன்றுள்ளது.
**
இத்தேவை கருதியே நான்காம் தமிழாக, அறிவியல்
தமிழை உருவாக்க வேண்டும் என்ற சூழல் உருவாகி
உள்ளது. கண்முன்னே நிற்கும் இந்தத் தேவையை
ஏற்க மறுத்து, அறிவியல் இயற்றமிழில் அடங்கும்
என்று கூறுவது வேருக்கு வெந்நீர் ஊற்றும் செயலாகி
விடும்.   
--------------------------------------------------------------------------------------------
சிறப்புக் கவனம் தேவைப்படும் எந்த ஒரு பிரிவையும்
பொதுவில் வைப்பதைத் தவிர்த்து, தனியாகப்
பிரித்து எடுப்பதன் மூலமே வளர்ச்சி சாத்தியப்படும்.
இது மானுடம் அதன் பட்டறிவின் மூலம் உணர்ந்த உண்மை.
**
ஏற்கனவே இருக்கும் இயற்றமிழில் அறிவியல்
இல்லை. எனவே அறிவியலுக்காக அதைத்
தனியாக எடுத்து, சிறப்புக் கவனம் செலுத்த
வேண்டும். எனவே நாக்கால் தமிழ் இன்றைய தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக