வியாழன், 16 ஜூன், 2016

உண்மை சுடும். தமிழ்நாட்டில் ஈழ ஆதரவுப் போலிகள்
என்னென்ன கயமைத் தனத்தைச் செய்து கொண்டு
இருக்கிறார்கள் என்று எங்கோ வெளிநாட்டில்
இருக்கும் நண்பர்களுக்குத் தெரியாது.
**
ராஜிவ் கொலையாளிகள்  விடுதலை ஆகிவிடக் கூடாது
என்று ஈழப் போலிகள் காய் நகர்த்துகிறார்கள்.
தான் அனுமதித்த வாகனப் பேரணியை ஜெயலலிதா
ஏன் ரத்து செய்தார் என்ற காரணம் பலருக்குத்
தெரியாது.
**
மனிதாபிமானம் பற்றியெல்லாம்   எங்களுக்கு
யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை. ராஜிவ்
கொலைக்குப் பின்னால் பாதிக்கப்பட்ட பலரில்
இக்கட்டுரை ஆசிரியரும் ஒருவர்.
**
புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பின்னாலும்,
அதை ஆதரித்து நான் மேற்கொண்ட உறுதியான
நடவடிக்கைகளை என்னால் பட்டியலிட முடியும்.
**
நாங்கள் புலிகளை ஆதரித்து, அதன் கஷ்டங்களை
அனுபவித்துக் கொண்டு இருந்த நேரத்தில்.
சுகபோகமாக வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள் யாரும்
எமது பதிவுகளை பற்றிப் பேச உரிமை இல்லை.
** 
இறுதியாக, போலிகளை நம்புவதால் இவர்கள்
ஒருநாளும் விடுதலையாகப் போவதில்லை.
சீமானும் திருமுருகன் காந்தியும் இவர்களுக்கு
விடுதலை வாங்கி கொடுத்து விடுவார்கள் என்று
நம்புவது அறியாமை.
************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக