செவ்வாய், 28 ஜூன், 2016

மனோகர் மற்றும் நந்தகுமார் கவனத்திற்கு,
----------------------------------------------------------------------------------
திரு நந்த குமார் அவர்களுக்கு,
தங்களின் கூற்றில் முதல் பாதி ஏற்புடைத்தன்று.
பின்பாதிக் கூற்று நான் உரைத்த பொருளில்
இருந்து மாறுபடவில்லை. நெஞ்சைப் பறிகொடுத்தேன்
பாவியேன் என்பார் பாரதியார். இது மனோஹரமானது.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்பார் பாரதி
பிறிதோர் இடத்தில். சிலப்பதிகாரம் மனோஹரமானது
என்று இதற்குப் பொருள்.
**
மனதிற்கு  இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
என்பாள் ஆண்டாள். இங்கும் மனோஹரம் வருகிறது.
இன்னும் நிறையக் கூற இயலும். ஆகவே மனோஹர்
என்ற நண்பரின் பெயர் மனதிற்கு இனியவன் என்ற
பொருளைப்  பெறுகிறது.
**
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதம் என்பது அறிவியல். இது
இந்தியாவிலும் பிற கீழ்த்திசை நாடுகளிலும்தான்
முதலில் தோன்றியது. பின்னரே மேற்கத்திய
நாடுகளிலும் தோன்றியது.
**
தங்கள் குறிப்பிட்ட நார்வே, ஜப்பான் போன்ற
நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கமோ கம்யூனிஸ்ட்
ஆட்சியோ இல்லை. என்றாலும் அங்கே நாத்திகம்
(கடவுள் மறுப்பு) வளர்ந்திருக்கிறது. இது எப்படி
என்று தங்கள் கேட்கிறீர்கள்.
**
நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கம்யூனிசம்
இல்லையே தவிர, பொருள்முதல்வாதம் நிரம்பவே
இருக்கிறது. காரணம் அறிவியல் வளர்ச்சி.
இங்கிலாந்தில் நாத்திகர்கள் அதிகம். காரணம்
அறிவியல் வளர்ச்சி. பொருள்முதல்வாதம் என்பது
அறிவியலின் அடிப்படையில் இந்த உலகின்
தோற்றத்தை, பிரபஞ்சத்தின் தோற்றத்தை
விளக்குவது அவ்வளவே.
**
எனவே அறிவியல் வளர்ந்தால் போதும்.
பொருள்முதல்வாதம் வளர்ந்ததாகத்தான் அர்த்தம்.
கம்யூனிசம் அங்கு இல்லை என்பது ஒரு குறையே அல்ல.
**
பொருள்முதல்வாதம் குறைந்தது 2000 ஆண்டு கால
வரலாறு உடையது. காரல் மார்க்ஸ்தான் பொருள்முதல்வாதத்தைக்   கண்டுபிடித்தார் என்று
யாரும் பொருள் கொள்ளக் கூடாது. மார்க்ஸ் 19ஆம் நூற்ராண்டுக்காரர். மார்க்ஸ் தம்முடைய மார்க்சியத்தில்
பொருள்முதல்வாதத்தைச் சேர்த்துக் கொண்டார்.
**
இந்தியாவில் போலி கம்யூனிஸ்ட்களாகச் சீரழிந்து
போன CPI,CPM கட்சியினர் தமது வேலைத்திட்டத்தில்
ஒரு பகுதியாக பொருள்முதல்வாதத்தைப் பரப்பவில்லை.
மாறாக, கட்சியின் அணிகள் வாக்கு வங்கி
அரசியலுக்காக கருத்துமுதல்வாதத்தை தூக்கிப்
பிடித்துக் கொண்டு கிடந்தனர். இதன் காரணமாகவும்
கடவுள் மறுப்புக்கு கொள்கை இந்தியாவில்
செல்வாக்குப் பெறவில்லை.
**
மெய்யான நாகசால்பாரிகள் மற்றும் மாவோயிஸ்டுகள்
மட்டுமே பொருள்முதல்வாதத்தில் ஊன்றி நிற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக