செவ்வாய், 26 மே, 2015

"துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்கிறோம்" என்ற புலிகளின்
அறிவிப்பு, சர்வதேச சமூகத்துக்குச் சொல்லப் பட்டது. இதைச்
சொன்னவர் திரு செல்வராசா பத்மநாபன். இவர் புலிகளின்
சர்வதேச ராஜதந்திர உறவுகளுக்கான தலைவர். இந்த அறிவிப்பு,
 சரியாக 2009, மே 17 அன்று GMT நேரம் (காலை) 08:22 மணி
நேரத்தில், புலிகளின் இணையதளமான Tamilnet தளத்தில்
வெளியிடப் பட்டது.
**
நடேசன் தலைமையில் சரண் அடையச் சென்றது
அதே 2009 மே 17 அன்று. துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்கிறோம்
என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நடேசன் தலைமையில் சரண்
அடைந்தனர். இவை யாவும் வரலாற்று உண்மைகள்.
**
இதைத் தெரிந்து கொள்ளாமல், "யாரும்  சரண் அடையவில்லை"
என்று சொல்லுவதும், "ஆயுத மௌனிப்பு என்பது போர்நிறுத்தம்"
என்று கூறுவதும் உண்மைக்குப் புறம்பானவை. கண்ணெதிரே
நடந்த நிகழ்வின் வரலாற்றைத் திரிக்கும் முயற்சி.          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக