சனி, 2 மே, 2015

திரு ஈஸ்வரன் அவர்களுக்கு,
சிந்து சமவெளி நாகரிகம் பற்றி மார்க்ஸ் அறிந்திருக்கவில்லை
என்று நான் எழுதவே இல்லை. மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம்.

"இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் அறிந்து இருக்கவில்லை"
என்று நான் எழுதியதைத் திரித்து, சிந்து சமவெளி
நாகரிகத்தைப் பற்றி மார்க்ஸ் அறிந்திருக்கவில்லை என்று
புரட்டுவது நேர்மையற்ற செயல்.    
**
நீங்கள்தான் அறிவாளி, மற்றவர்கள் முட்டாள்கள்
என்ற கருத்தில் நீங்கள் எழுதிய பின்வரும் வாக்கியம் உங்களின்
ஆணவத்தை எடுத்துக் காட்டுகிறது.
///உங்களது ஒவ்வொரு அறியாமையையும் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்க முடியாது.///


நீங்கள் என்ன மார்க்சியப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரா?
உங்களின் மார்க்சிய அந்தஸ்து என்ன? உங்களின் மார்க்சிய
நடைமுறை என்ன? கூற முடியுமா?
**
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
****************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக