செவ்வாய், 5 மே, 2015

தோழர் சுந்தர விநாயகம் அவர்களுக்கு,
மார்க்சியம் ஒரு சர்வ ரோக நிவாரணி என்று மூல ஆசான்கள் 
ஐவரும் உரிமை கோரவில்லை. ஆனால், மார்க்சியத்தை 
ஆழமாகக் கற்காமலும், கற்றதைப் புரிந்து கொள்ளாமலும்,
புரிந்து கொண்டதை நடைமுறைப் படுத்தாமலும் இருக்கும் 
சில குட்டி முதலாளித்துவ விடலைகளுக்கு, உண்மையை 
உணர்த்தவே இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது. தலைப்பில் 
காணப்படும் "பம்பரம் விளையாடும் சிறுவர்களின் கூச்சல்"
என்ற தொடர் இதை உறுதிப் படுத்துகிறது.
**
அரசு அலுவலகங்களில் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் 
ஊழியர்கள் ஒரு "தயார்நிலை அட்டவணை"யை (READY 
RECKNOR) மேசையில் வைத்து இருப்பார்கள். மார்க்சியம் 
என்பது அது போன்ற ஒரு ரெடி ரெக்னர் என்றுதான்  இந்தக் 
குட்டி முதலாளித்துவ விடலைகள் கருதுகின்றனர்.
**
மார்க்சியம்  என்பது ஒரு திசைகாட்டி. அது ஒரு வழிகாட்டி.
(GUIDE). அதாவது செயலுக்கான வழிகாட்டி. இதைப் புரிந்து
கொள்ள இயலாத, இயக்க மறுப்பியல் பார்வை உடைய  
விடலைகள், "மார்க்சுக்குத் தெரியாதது எதுவும் இல்லை" 
என்று கூச்சல் இடுகிறார்கள். அவர்களை எப்படித் 
திருத்துவது? அவர்களுக்கும் மார்க்சியத்தைப் புரிய 
வைக்க வேண்டும் அல்லவா? எனவேதான் இக்கட்டுரைகள்.
**
    , 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக