வெள்ளி, 22 மே, 2015

முகநூலில் சாதியத்தின் திரண்ட வடிவத்தின்
பிரதிநிதியாக மார்க்சிய வேடதாரி ஏ கே ஈஸ்வரன்!
------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------
INSULT IS A THING THAT CANNOT BE CARRIED HOME.
--------Bharath Rathna Dr B R Ambedkar.
---------------------------------------------------------------------------------
சமூகத்தில் உள்ள சாதி, சமூகத்தின் எல்லா
நிறுவனங்களிலும் பிரதிபலிக்கிறது. தமிழ்ச் சூழலில்,
முகநூலில், சாதியத்தின் திரண்ட வடிவமாக,
திரு ஏ கே ஈஸ்வரன் என்பவர் இருக்கிறார்.
தொழில் ரீதியாக இவர் ஒரு புத்தக வியாபாரி.
தம்மை மார்க்சிஸ்ட் என்று கூறிக் கொள்ளும் இவர்,
உண்மையில் ஒரு போலி வேடதாரி.
**
பறப்பசங்க, சேரிப்பசங்க என்ற வார்த்தைப் பிரயோகங்கள்
இவர் வாயில் இருந்து சரளமாக வரும் என்று நிறையப்
புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன.
**
SC/ST இனத்தைச் சேர்ந்த முகநூல் பதிவர்கள்
ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் என்பது இவரின்
திடமான கருத்து. அவர்களின் பதிவுகளில் இவர் இடும்
பின்னூட்டங்கள், தலித் தோழர்களை வசை பாடுவதும்
அவமதிப்பதாகவுமே இருக்கும். இது குறித்து, பல
தோழர்கள் எங்களிடம் ஆதாரங்களுடன் புகார்
தெரிவித்து இருக்கிறார்கள்.
**
சாதி வெறி உச்சந்தலைக்கு ஏறிப் போய், மண்டைக்
கனத்தால், தலித் முகநூல் பதிவர்களை அவமதிப்பது
என்பது ஒரு வினாடி கூட சகித்துக் கொள்ள முடியாது.
பறையன், சேரிப்பசங்க போன்ற சாதிகொழுப்பேறிய
வார்த்தைகளை காலம் காலமாக, இந்த 2015லும்
கேட்டுக் கொண்டு இருக்க நாங்கள் சோற்றால் அடித்த
பிண்டங்கள் அல்ல என்று குமுறுகிறார்கள் தோழர்கள்.
** 
 இருநூறு ரூபாய் இருந்தால் போதும், இந்தியாவில் யார்
வேண்டுமானாலும் மதக் கலவரத்தை உண்டாக்கி விடலாம்
என்று மார்க்கண்டேய கட்ஜு கூறுவார். இந்த ஈஸ்வரனை
மனதில் நினைத்துக் கொண்டுதான், கட்ஜு அப்படிக் கூறி
இருக்க முடியும்.
**
"பறையன் என்றால் திருடன்" என்று தன்  நட்பில் உள்ள
 முஸ்லிம் பதிவரை விட்டுப் பின்னூட்டம் போடச் சொல்லி
விட்டு, மதக் கலவரத்தைத் தூண்டுபவர் இந்த ஏ கே ஈஸ்வரன்.
பெரியாரையும் பகுத்தறிவு இயக்கத்தையும் இழிவாக
எழுதிப் பதிவுகள் போடுவதும் அத்தகைய பதிவுகளைப்
பகிர்ந்து ஊக்கமளிப்பதும் இவரின் வாடிக்கை.
**
திரு ஈஸ்வரன் மீதான புகார்கள் ஆதாரங்களுடன் எங்களிடம்
சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. முகநூலின் சாதிவெறி அதன்
திரண்ட வடிவத்தில், திரு ஏ கே ஈஸ்வரனிடம் தங்கி
இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. எனவே
எதிர்வரும்  ஞாயிறு 24.05.2015 காலை 11 மணியளவில்
நடைபெறும் மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தின் செயற்குழுக்
கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப் படும்.
**
சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டம், SC /ST வன்கொடுமைத்
தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் இவரின்
குற்றங்கள் வருகின்றன என்பது சட்ட ஆலோசகர்களின்
கருத்து.
**
மார்க்சியப் பிழைப்புவாதியும் போலி வேடதாரியும்,
மிக மூர்க்கத்தனமான சாதி வெறியனும் ஆகிய ஏ கே
ஈஸ்வரனை மார்க்சிய சிந்தனைப் பயிலகம் அம்பலப்
படுத்துகிறது. இந்த இழிந்த நபரின் சாதி ஆணவத்தை
முறியடிப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
தோழமையுள்ள,
(ஒப்பம்) ---பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
சென்னை ,நாள்:24.05.2015
********************************************************************* 

            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக