சனி, 2 மே, 2015

ஒரு விவாதத்தில் மனதின் சமநிலையைப் பாவிக்க 
முடியவில்லை உங்களால் என்பது வருத்தம் தருகிறது.
மிகுந்த குட்டிமுதலாளித்துவப் பதற்றத்துடன் நீங்கள் "எழுதும்"
ஒவ்வொரு கமென்ட்டும் தாங்கள் எவ்விதப் பக்குவமும் அற்ற,
விடலைத்தனம் நிறைந்த ஒரு குட்டிமுதலாளியவாதி 
என்பதை அம்பலப் படுத்தி விடுகிறது.
**
மார்க்சியம் கற்பதன் நோக்கம் அதை நடைமுறைப் படுத்தும் 
பொருட்டு. தங்களின் மார்க்சிய நடைமுறை பூஜ்யம் என்பது 
எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. இருப்பினும் உங்கள் 
மீது சினம் ஏற்படவில்லை. பரிதாபம்தான் ஏற்படுகிறது.
மார்க்சிய நடைமுறை இல்லாமல் மார்க்சியம் எந்த 
மண்டைக்குள்ளும் இறங்காது.
**
ரயில்பாதைகள் போட்டால், தொழில் வளர்ச்சி ஏற்பட்டால் 
சாதி ஒழிந்து விடும் என்று கருதினார் மார்க்ஸ். அது பொய்த்துப் 
போனது. எனவே, சாதி குறித்து ஆழமான புரிதல் தேவைப் 
படுகிறது. அதற்காகவே இந்த விவாதம். எனவே வசவுகளைத் 
தவிர்த்து விட்டு, காத்திரமான கருத்துக்கள் இருந்தால், 
முன்வையுங்கள்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக