வியாழன், 14 மே, 2015

மறைந்த மார்க்சிய லெனினியப் புரட்சியாளர் தோழியர் அனுராதா
காந்தி, சாதி குறித்து எழுதுகையில், சாதி என்பது உற்பத்தி முறையில்
( MODE OF PRODUCTION) பிறந்தது என்கிறார்.(பார்க்க: SCRIPTING THE
CHANGE என்ற நூல்). அதாவது சாதி என்பது அடித்தளம் ஆகும்
என்கிறார். எனவே, சாதி என்பது மேல்கட்டுமானமே என்று
கிளிப்பிள்ளைத் தனமாகச் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன
பயன் விளையும்? குறைந்தபட்சம் மார்க்சிய-லெனினிய
அமைப்புகள் மத்தியில் நிலவும், இந்தப் பன்மைத் தன்மையை
அங்கீகரிக்க வேண்டும் அல்லவா?
**
அருந்ததி ராயின் கருத்தை ( பார்ப்பனீயமே முதலாளித்துவத்தின்
தாய்) வெறும் குட்டி முதலாளித்துவ சிந்தனை என்று ஒதுக்கித்
தள்ளி விடலாம். ஆனால், அனுராதா காந்தியின் கருத்தை
அப்படி ஒதுக்கித் தள்ள முடியாதே.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக