ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில், ரஷ்யா ஐரோப்பாவில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. நாட்டுப்புறங்கள் விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்தன. நகர்ப்புறங்களில் முதலாளித்துவம் வளர்ச்சி அடையாமல் இருந்தது.
சுருக்கமாக, அன்றைய சோவியத் யூனியன், அன்றிருந்த மேற்கு ஐரோப்பாவை விட ஐம்பது அல்லது நூறு வருடங்கள் பின்தங்கி இருந்தது. அப்படியான அரசியல்- பொருளாதாரப் பின்னணியில் தான் ஸ்டாலின் அதிபராகப் பதவியேற்றார்.
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், ரஷ்யாவின் நூறாண்டு கால பொருளாதாரப் பின்னடைவை வெறும் பத்து வருடங்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று விரும்பினார். "நாங்கள் முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாக வளர்ச்சி அடைவோம், அல்லது அழிந்து விடுவோம்" என்ற லெனினின் கூற்றை மேற்கோள் காட்டினார்.
"மேற்கு ஐரோப்பாவில் கடந்த நூறு வருடங்களில் நடந்த தொழிற்புரட்சி, சோவியத் யூனியனில் பத்து வருடங்கலுக்குள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால், அயலில் உள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் போன்றன ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமித்து விடும் என்று கூறினார்.
ஸ்டாலினின் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்பது போல, 1941 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி படையெடுத்து வந்து, உக்ரைன், வெள்ளை, ரஷ்யா, மற்றும் பல ரஷ்யாவின் ஐரோப்பிய பிரதேசங்களை ஆக்கிரமித்தது. ஆனால், அதற்கு முன்னர் ஸ்டாலினின் சோஷலிச தொழிற்புரட்சியானது, சோவியத் யூனியனை நவீன இராணுவ வல்லரசாக மாற்றி விட்டிருந்தது.
Gosplan எனும் அரச திட்டமிடல் அமைப்பு, இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி, சோஷலிச பொருளாதாரத்தை, மேற்கத்திய முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சமமாக கொண்டு வந்தது. அதன் விளைவு, 1945 ம் ஆண்டு, முழு உலகிற்கும் தெரிய வந்தது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனியும், ஜப்பானும் போரில் தோற்கடிக்கப் பட்டன.
Like · Comment · 
  • Kalaiyarasan Tha Source: Revolutionary Russia, 1891-1991 by Orlando Figes
    Like · Reply · 1 · May 10 at 1:23pm
  • ச. சங்கர் இன்றும் ரஷ்யா இரும்புத்திரை நாடுதானா?
    Like · Reply · 1 · May 10 at 1:42pm
  • ச. சங்கர் நம் நாட்டு இளைஞர்கள் சிலர் ரஷ்யாவில் எளிதாக மருத்துவம் படிக்கிறார்களே!
  • Kalaiyarasan Tha இரும்புத்திரை என்பது சர்ச்சிலும், மேற்கத்திய நாடுகளும் சூட்டிய நாமம். பெர்லினை ஒன்று சேர்ப்பதில் எழுந்த நெருக்கடி பனிப்போர் ஆக மாறியது. அதிலிருந்து தான் "இரும்புத்திரை" நாடுகள் உருவாகின. மேற்குலகம் செல்வாக்கு செலுத்த முடியாத நாடுகள் என்ற அர்த்தத்தில் அப்படி அழைத்தார்கள்.
    Like · Reply · 16 · May 10 at 1:50pm
  • Manju Manjunathan ரஷ்யஅரசியல் தலைவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாதா? ஏன் ஈழ தமிழர்களுக்கு எதிராக ஐநா வில் அணிதிரட்டுகிறது
    இலங்கையை ஏன் கண்டிக்கவில்லை?
    ரஷ்யாவின் அரசியலை எந்த நாடும் பின்பற்றகூடாது
    Like · Reply · 1 · May 10 at 3:23pm
  • Petchi Muthu Manju Manjunathan குழந்தைதனமா பேசாதீங்க. .இப்போது உள்ளது சோவியத் இரஷ்யாவும் கிடையாது .அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சியும் கிடையாது .இப்போது உள்ள ரஷ்யாவின் அரசியலை எந்த நாடும்
    பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை ...
    Like · Reply · 3 · May 10 at 4:29pm · Edited
  • Defend Snowdenரஷ்ய புரட்சிக்கு பிந்தைய அபிவிருத்திகள் மிக சிக்கலானவை, ஆழமான மற்றும் கோட்பாட்டு ரீதியான பல விவாதங்களை,அது பற்றி எழுதப்பட்ட ட்ரொட்ஸ்கியின் லெனின் கடசி மரணசாசனம் பற்றி படிக்காமல்,ஸ்ராலினது தனிநாட்டில் சோசலிசத்தின் பின்விளைவுதான் சோவியத்தின் உடைவு என்பதை...See More
    Like · Reply · 1 · May 10 at 4:55pm · Edited
  • Defend Snowdenஆனால் ரஷ்ய புரட்சியின் தேட்டத்தின் மீதிருந்த நம்பிக்கைதான் மீண்டும் மக்களுக்கு தமது சொந்த புரட்சியினை காப்பாற்றவிட்டால் மாபெரும் அழிவு வரும் என்பதால் தம் உயிரை துச்சமாக மதித்து பல உயிர் தியாகங்களை செய்து ரஷ்யாவினை பாதுகாத்தார்கள். இந்த அழிவுகளை தவிர்த்திருக்க முடியும் உண்மையில் ஸ்ராலின் சோசலிச சர்வதேசியவாத த்திற்காக போராடியிருந்தால் ஆனால் அவர் இறுதியில் தான் பாதுகாத்த ட்ரொட்ஸ்கியை நாடுகட்த்திவிட்டு கட்சிக்குள் வேரூன்றிய அதிகாரத்துவ தட்டுக்கு அடிபணிந்து தனது உயிர் தோழர்களைக்கூட படுகொலை செய்தார். அந்த மட்டத்திற்கு அதிகாரத்துவ தட்டின் வெறிபிடித்த பாதுகாவலராக ஸ்ராலின் உருவெடுத்தார். இதை புரிந்துகொள்ள வேண்டுமானால் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களையும் லெனின் ஏப்ரல் தேசிஸ் மற்றும் டெஸ்டாமென்டினை படியுங்கள். பல கேள்விகளில் ஸ்ராலின் தவறாக முடிவெடுக்கிறார் வளர்ந்துவந்த அதிகாரத்துவ தட்டுக்கு அடிபணிந்துவிட்டார் என லெனின் புரிந்ுகொண்டபோது பாரிய நோயினால் பாதிக்கப்பட்டுவிட்டார்.அந்த நோயினை குணப்படுத்தாது ஒழுங்கான மருந்துகொடுக்காது வைத்த தில் ஸ்ராலின் முக்கியபாத்திரம் வகித்தார். லெனின் இறந்தவுடன் லெனினை தெய்வமாக்கிவிட்டு அவர் பெயரால் பெரும் அழிவுகளைச் செய்தார். பிரபாகரன் இறந்துவிட்டார் என கூறி அல்லது இறக்கவில்லை என கூறி அதைவைத்து அவரை புனிதராக்கிவிட்டு அரசியல் செய்யும் பினாமிகளைப்போல்தான்..முற்றாக அதற்கு ஒப்பிட முடியாது இருந்தும் நோக்கம் ஒன்றுதான். தமது சொந்த அதிகாரத்துவ நலனை பாதுகாக்க புரட்சியின் தேட்டங்களையும் லெனினை புனிதமாக்கிவிட்டு அந்தப்புரட்சியின் சர்வதேச அடித்தளத்தினை கைவிட்டார்கள்.இதன் காரணமாகத்தான் ரஷ்ய உடையவேண்டி வந்த து. இருந்தும் ரஷ்ய அடைந்த பல வியக்கத்தக்க சாதனைகள் புரட்சியின் தேட்டங்களால் உந்தப்பட்டவையே,.ஆனாலும் ஜரோப்பாவுக்கு விரிவாக்கப்பட்டிருக்குமானால் நாம் இன்று ஒரு சோசலிச உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்போம்...இதை ஸ்ராலின் தனது தனிநாட்டில் சோசலிசம் என்ற கொள்கையின் அடிப்படையில் காட்டிக்கொடுத்தார்.உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு மாபெரும் அழிவினை விளைவாக்கினார்
    Like · Reply · 1 · May 10 at 4:52pm
  • Manju Manjunathan பிச்சைமுத்து அய்யா உலகில் தற்சமயம் எங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது?
  • Vinoth Kumar Manju Manjunathan why don't we start ?
    Like · Reply · 1 · May 10 at 5:55pm
  • Kalaiyarasan Tha Manju Manjunathan பாவம் அவரு சின்னப் புள்ளைங்க... அறியாம சொல்லிட்டாரு.... அவருக்கு எத்தனையோ தடவை விளக்கம் கொடுத்து விட்டேன். ஆனால், நாய் வாலை நிமிர்த்தினாலும் அது பழையபடி வளைந்து தானிருக்கும்.
    Like · Reply · 2 · May 10 at 9:32pm
  • Ilango Pichandy
    Write a comment...