வெள்ளி, 27 மே, 2016

மதமாற்றம் எந்த விதத்திலும் பட்டியல் இனத்தவரின்
முன்னேற்றத்திற்குப் பயன்படாது. இதை திருமாவளவன்
அனுபவங்களின் அடிப்படையில் உணர்ந்து இருக்கிறார்.
இந்து மதத்தில் இருந்து விலகுவது இடஒதுக்கீட்டுப்
பயனை உதறித் தள்ளுவது ஆகும். எனவே மதமாற்றம்
வேண்டாம் என்ற திருமாவின் நிலைப்பாடு சரியானதே.
இதில் அவர் ஊன்றி நிற்க வேண்டும்.
**
அடுத்து, அகமணமுறைதான் சாதியை
உருவாக்கியது என்ற கருத்தும் சரியல்ல.
சாதியின் உருவாக்கத்தில் உள்ள பொருளியல்
காரணிகளைக் கணக்கில் கொள்ளாமல் விடுவதால்
நிகழும் தவறு இது.
**
ஒரு சமூகத்தில், பல்வேறு விஷயங்களில், நமது
கருத்தும் நமக்கு எதிரான நிலை எடுப்பவர்களின்
கருத்தும் சில நேரங்களில் ஒத்துப் போகும். இது
இயல்பே. எனவே மதமாற்றம் குறித்த திருமாவின்
கருத்தும் இந்துத்துவவாதிகளின் கருத்தும் ஒத்துப்
போவதால் எந்தத் தவறும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக