திங்கள், 30 மே, 2016

மன்னிப்புக் கேட்டால் மட்டுமே கூட்டணி!
---------------------------------------------------------------------------
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி
வைக்காத கட்சிகள், தற்போது மாறிய சூழ்நிலையில்,
திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன.

அப்படிக் கூட்டணி சேர விரும்பும் கட்சிகள்
திமுகவிடம் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே
அவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது
பற்றி திமுக பரிசீலிக்கும் என்று திமுக தலைமை
முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அப்படி முடிவு எடுக்கப் பட்டிருக்குமேயானால்,
அது வரவேற்கத்தக்கது என்ற கருத்தே திமுகவின்
அணிகள் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

கோமாளி விஜயகாந்தும் பிரேமலதாவும்
கோபாலபுரம் வந்து கலைஞரிடம் மண்டியிட்டு
மன்னிப்புக் கேட்கும் நாள் வெகுதொலைவில்
இல்லை என்கிறார்கள் திமுக இரண்டாம்நிலைத்
தலைவர்கள்.
*************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக