வெள்ளி, 27 மே, 2016

தா பாண்டியன் நீக்கப் படுவாரா?
CPI இளைஞர்கள் போர்க்கொடி!
-----------------------------------------------------------
வரிசையாகவும் தொடர்ந்தும் டெப்பாசிட்
இழந்து கேவலமான தோல்விகளை கம்யூனிஸ்ட்
கட்சி சந்தித்துக் கொண்டு வருகிறது.

இவ்வளவு கேவலமான தோல்விகளுக்கு மூத்த
தலைவர் தா பாண்டியனின் ஜெயா விசுவாசம்
ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதனால் 
கம்யூனிஸ்டுகள் என்றாலே ஊர் சிரிப்பாய்ச்
சிரிக்கிறது. 

இதற்கெல்லாம் காரணமான தா பாண்டியனைக்
கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சில
இளைஞர்கள் கட்சித் தலைமைக்குக் காரசாரமாக
கடிதம் எழுதி உள்ளனராம்.

தா பாண்டியனை மட்டுமல்ல, நல்லகண்ணுவையும்
சுப்பராயனையும் கூடக் கட்சியை விட்டு நீக்க
வேண்டும் என்கிறாராம் மகேந்திரன். சுப்பராயன்
முன்பு தா.பா.வுடன் UCPIக்குப் போனவர்.

மகேந்திரனின் யோக்கியதை தெரியாதா? ஈழப் பெண்
ஒருத்தியைக் கற்பழித்தும் பணமோசடி செய்தும்
உள்ள வழக்கு அவர் மேல் இருக்கிறதே என்று
தா பாண்டியன் தரப்பு பதிலடி கொடுத்ததும்
வாயடைத்துப் போனாராம் மகேந்திரன்.

மொத்தத்தில் இந்தப் போலிகளால் CPI கட்சி
சிரிப்பாய்ச் சிரிக்கிறது!
*******************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக