வெள்ளி, 27 மே, 2016

மன்னிக்க முடியாத தவறுகள்!
-------------------------------------------------------
தரகர் தமிழருவி மணியன் 2014 தேர்தலில்
பெரிய அளவிலான தரகு வேலை பார்த்தார்.
மோடி பிரதமராக வேண்டும் என்ற ஒரே
நோக்கத்திற்காக கடுமையாக உழைத்தார்.
முரண்பட்டும் சண்டையிட்டுக் கொண்டும்
இருந்த பாமக, தேமுதிக, மதிமுக  ஆகிய
கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார்.
**
இந்த வேலையை வெற்றிகரமாக முடித்தாலும்,
அதன் ஊடாக, விஜயகாந்தின் மச்சான் சுத்தீஷ்
என்பவராலும் ராமதாசாலும் பலமுறை அவமானப்
படுத்தப் பட்டார்.
**
இவ்வளவு கச்தப் பட்டு, தரகு வேலை பார்த்தது
எதற்காக? மோடியைப் பிரதமர் ஆக்குவதற்காக.
**
இந்த வேலையை எல்லாம் காந்திய மக்கள் இயக்கம்
என்ற பெயரில் இந்தத் தரகர் செய்தார். இது மோசடி.
இது பித்தலாட்டம். இது கயமை.
**
மோடியை ஆதரிக்க தரகருக்கு உள்ள உரிமையை
நாம் மறுக்கவில்லை. ஆனால் காந்தி, காமராசர்
பெயரை உச்சரித்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்
வேட்பாளர் மோடியை ஆதரித்தது மன்னிக்க
முடியாத குற்றம்.
**
தரகரைப் போன்ற பித்தலாட்டப் பேர்வழிகள்
நேர்மையாளர் வேடம் தரிக்கலாம். அது நிமிடத்தில்
கரைந்து விடும். எனவேதான் அவர் அரசியல்
துறவறம் பூண நேர்ந்தது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக