சனி, 28 மே, 2016

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உடைகிறது!
தா பாண்டியன் தனிக்கட்சி தொடங்குகிறார்!
தளி ராமச்சந்திரனுக்கு முக்கியப் பொறுப்பு!
------------------------------------------------------------------------------------
1) மீண்டும் UCPI (United Communist Party of India) கட்சியைத்
தொடங்குகிறார் தா பாண்டியன்.

2) நல்லகண்ணு, சுப்பராயன், தளி ராமச்சந்திரன்
ஆகியோர் தா.பாண்டியனுடன் இணைகிறார்கள்.

3) தமிழ் மாநிலச் செயலாளராக தளி ராமச்சந்திரன்
பொறுப்பு ஏற்க இருக்கிறார். இவர் முத்தரசனுக்குச்
சரியான போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. 

4) புலிகள் நிரம்பிய கானகத்தில் புள்ளிமான் போல
வென்றவர் ஜெயலலிதா என்று தா பாண்டியனால்
பாராட்டப்பட்ட ஜெயலலிதா புதுக் கட்சியின்
தொடக்க விழாவில் முதன்மை விருந்தினராக
(Chief Guest) கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.

5) மேற்கு வங்கம், கேரளத்தில் உள்ள சீட்டுக் கிடைக்காத
சில அதிருப்தியாளர்களுடன் தா.பா தொடர்பில் உள்ளார்.
அவர்களும் இந்த UCPI கட்சியில் இணைவார்கள்
என்று தா.பா நம்பிக்கை கொண்டுள்ளார்.

6)அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில், தற்போதைய
டி ராஜாவின் பதவிக்காலம் முடியும் தருவாயில்,
அந்த இடத்தை ஜெயலலிதா தமக்கு வழங்குவார்
என்று தா.பா மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்.

7) புதிய கம்யூனிஸ்ட் கட்சி UCPI ஜிந்தாபாத்!
இன்குலாப் ஜிந்தாபாத்!!
ஜெயலலிதா ஜிந்தாபாத்!!
*********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக