வியாழன், 26 மே, 2016

தா பாண்டியன் அதிமுகவில் சேர முயற்சி!
ராஜ்யசபா எம்.பி.ஆகிறார்!!
அதிமுக வேட்பாளர் பட்டியலில் விஜயகுமார் நீக்கம்?!!
----------------------------------------------------------------------------------------------------
கடைசி நேரத்தில் கட்சி மாறி அத்திமுகவில் சேர்ந்த
வாசனின் கூட்டாளி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணினுக்கு
ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி. பதவி அளித்துள்ளார்.

இதனால் மிகவும் தூண்டப்பட்ட தா பாண்டியன்
(இது ஒரு induction effect) அதிமுகவில் சேர
விரும்புவதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து
அதிமுக அறிவித்துள்ள ராஜ்யசபா வேட்பாளர்
பட்டியலில் இருந்து விஜயகுமார் நீக்கப் படுவார்
என்றும் அந்த இடம் தா பாண்டியனுக்கு வழங்கப்
படும் என்றும் அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

ஓ பன்னீர்செல்வம் இதற்கான முயற்சிகளை
மேற்கொண்டு வருவதாகவும் அம்மா அவர்களின்
ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகவும் தகவலறிந்த
வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தா பாண்டியன், தளி ராமச்சந்திரன் போன்ற
கம்யூனிசப் புரட்சியாளர்கள் நாடாளுமன்ற
சட்டமன்ற இருக்கைகளில் அமர்வதன் மூலமே
இந்தியப் புரட்சி விரைவு படுத்தப்படும் என்று
வலது கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.

ராஜ்யசபா எம்.பி. தா பாண்டியன் ஜிந்தாபாத்!
இன்குலாப் ஜிந்தாபாத்!!
புரட்சித் தலைவி அம்மா ஜிந்தாபாத்!
**************************************************************
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக