சனி, 28 மே, 2016

நடிகர் அஜித்தைச் சந்திக்க
சென்னை வருகிறார் சீத்தாராம் எச்சூரி!
--------------------------------------------------------------------------
இனி விஜயகாந்த் போணியாக மாட்டார் என்று
ஏகமனதாகத் தீர்மானித்து விட்டது மார்க்சிஸ்ட்
பொலிட்பீரோ. டெப்பாசிட் இழந்து கந்தலாகிப்
போன விஜயகாந்தை இனிமேலும் ஆதரித்துக்
கொண்டிருந்தால், பாடை உறுதி என்று தெளிவாக
உணர்ந்து கொண்டனர் பொலிட்பீரோ தலைவர்கள்.

பூர்ஷ்வா கட்சிகள் எல்லாம் நிகழ்காலத்தைப் பற்றி
மட்டுமே சிந்திக்கும். ஆனால் மார்க்சிஸ்ட்
சித்தாந்தவாதிகளான பொலிட்பீரோ அறிஞர்கள்
எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்க
தரிசனத்துடன் தான் நிகழ்காலத்தை அணுகுவார்கள்.

அந்த வகையில், இன்னும் 5 ஆண்டுகள் கழித்து
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்
யாரையாவது சினிமா பிரபலத்தை முன்னிறுத்தி,
அவரை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கி
அதன் மூலம் கட்சியையும் கம்யூனிசத்தையும்
வளர்க்க முடிவு செய்துள்ளனர் பொலிட்பீரோ
தலைவர்கள்.

அந்த வகையில் தமிழில் முன்னணி ஹீரோவாக
இருக்கும் நடிகர் அஜித் மீது பொலிட்பீரோ
அறிஞர்களின் பார்வை விழுந்துள்ளது. முன்னதாக
அஜித் நடித்த பல்வேறு படங்களின் சி.டி.க்களைப்
போட்டுப் பார்த்துள்ளனர் பொலிட்பீரோ மேதைகள்.
இதில் அஜித் நடித்த வாலி படம் மிகவும் பிடித்துப்
போய் விட்டதாம் பிருந்தா காரத்துக்கு. அஜித் தான்
தமிழக முதல்வர் என்று ஒரே போடாகப் போட்டு
விட்டாராம் பிருந்தா. 

இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை 2021இல்
தமிழக முதல்வராக ஆக்குவதற்கு உடல் பொருள்
ஆவியை அர்ப்பணிக்கத் தயாராகி விட்டனராம்
பொலிட்பீரோ மேதைகள்.

2020இல் அஜித் கட்சி ஆரம்பிப்பது என்றும் 2021இல்
அஜித் முதல்வர் ஆவது என்றும் புரட்சிகர
அஜண்டாவை உருவாக்கி உள்ளனர் பொலிட்பீரோ
மேதைகள். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தைச்
சந்தித்துப் பேச சென்னை வருகிறாராம் சீத்தாரம்
எச்சூரி.

இன்குலாப் ஜிந்தாபாத்!
*********************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக