வெள்ளி, 19 மே, 2017

விவாதப் பொருளே அதுதான் (12ஆவது அம்சம்தான்).
தமிழகத்தில் நிலவுடைமைச் சமூகம் நிலவிய
காலத்தில் தமிழ் உச்சம் பெற்று இருந்தது. ஏனெனில்
உற்பத்தியின் மொழியாக தமிழ் இருந்தது.
நிலவுடைமை அழிக்கப்பட்டு இங்கு முதலாளியம்
தோன்றவில்லை. அதாவது ஒரு சுதந்திர பூர்ஷ்வா
வர்க்கம் உருவாகி, நிலவுடமை உற்பத்தி உறவுகள்
அகற்றப்பட்டு முதலாளியச் சமூகம்
உருவாகவில்லை.
**
ஏகாதிபத்தியம்
புகுத்திய உற்பத்தியில் தமிழ் இல்லை; ஆங்கிலமே
இருந்தது. எனவே உற்பத்தியில் இருந்து அகற்றப்பட்ட
தமிழ், இன்று வரை உற்பத்தியில் இருந்து அந்நியப்
பட்டு நிற்கிறது. எனவே காலத்திற்கேற்றவாறு
வளராமல் தேங்கிப்போன தமிழ் நவீன அறிவியலுக்கு
ஈடு கொடுக்க இயலாமல் திணறுகிறது.       

வரலாற்று ரீதியாக பல்வேறு மன்னர்களின் ஆட்சிக்
காலத்தில் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக இருந்தது
என்பது உண்மைதான். என்றாலும் மொழியியல் ரீதியாக
(linguistically) தமிழ் ஏற்கனவே உச்சம் அடைந்திருந்தது.
பக்தி இயக்க காலம் அடித்தட்டு மக்களை உள்வாங்கும்
பொருட்டு தமிழைப் போற்றியது. சைவத் திருமுறைகள்
பன்னிரண்டும் (தேவாரம் திருவாசகம் முதலியன)
நாலாயிரம் திவ்வியப் பிரபந்தமும் ஆக்கப் பட்டன.
கம்ப ராமாயணம் ஆக்கப் பட்டது.
அடுத்து சிறுபான்மையினரான உயர்வகுப்பினர்
சமஸ்கிருதத்தைப் போற்றியபோதும், பரந்துபட்ட
மக்கள் தமிழையே பேணினர். இதனால் எல்லாம்
தமிழ் உயிர்ப்புடன் இருந்தது.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக