புதன், 31 மே, 2017

மாட்டிறைச்சி உண்ணத்
தடையில்லை! எந்த இறைச்சிக்கும்
தடை இல்லை. அப்படி எந்தச்
சட்டத்தையும் மோடி அரசு
பிறப்பிக்கவில்லை! இதுவே உண்மை.  

அப்படியானால் மோடி அரசு பிறப்பித்த
சட்டம் என்ன சொல்கிறது? எமது அடுத்த
RDX கட்டுரை வெளியாகிறது.
பாஜகவின் கார்ப்பொரேட்

மாட்டிறைச்சித் திருவிழா
நடத்துவது அடையாள அரசியலே.
இது பாஜவுக்கே சாதகம்.
பாஜகவின் கார்ப்பொரேட்
அரசியலை எதிர்க்காமல் விடிவில்லை!

மக்கள் மீதான
பாஜகவின் பொருளாதாரத் தாக்குதலை
மூடி மறைக்கும் கபோதிகளே
மாட்டிறைச்சி உண்ணும்
போராட்டம் நடத்துகிறார்கள்.

உபி கேரளத்தில்
சில்லறை மாடு அறுக்கும் கூடங்களை
நடத்திப் பிழைப்பவர்கள்
வாழ்வு இழப்பார்கள்.
இதுவே மோடியின் சட்டம்.

கற்பனையில் மிதக்க  வேண்டாம், கண்டபடி
பேச வேண்டாம். மிக அன்மையில் நடந்த
போக்குவரத்துத் தொழிலாளரின்  போராட்டத்தை
என்னை விடத் தீவிரமாக ஆதரித்தவர் வேறு
யாரும் இல்லை; முகநூலில் அல்ல ஐயா,
பொதுவெளியில். ஒரு தொழிற்சங்கத்  தலைவராக 
நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தங்களை
நடத்தி இருக்கிறேன். கைது செய்யப் பட்டிருக்கிறேன்.
சிறைக்குச் சென்றிருக்கிறேன்.
**
எனவே வார்த்தையை அளந்து பேசவும்.
சில்லறை மாடு அறுக்கும் கூடங்களை
அழிப்பதும், அவற்றை வைத்துப் பிழைப்பவர்களை
வாழ்வு இழக்க வைப்பதும்தான் மோடியின்
புதிய சட்டம். இதை எதிர்க்காமல், இல்லாத
மாட்டிறைச்சித் தடையை இருப்பதாகக்
கற்பனை செய்து கொண்டு, காற்றோடு கத்திச்
சண்டையிடும் கபோதித்தனத்தையே
நான் கண்டிக்கிறேன்.
**
எனது எல்லாப் பதிவுகளையும் படிக்கவும்.
தடித்த எழுத்து ஒருவரிப் பதிவில் எல்லா
விஷயத்தையும் சொல்ல முடியாது. 


சில்லறை வர்த்தக
இறைச்சிக்கூட உரிமையாளர்களின்
பிழைப்பு பறிபோகிறது.
மோடியின் சட்டத்தால்!
இதை எதிர்க்கிறேன்!



குரல் கொடுக்காமல், மாட்டிறைச்சிக்கு தடை
என்று விஷயத்தைத் திசை திருப்புவதால்
யாருக்கு லாபம்?

சில்லறை வர்த்தகம் என்றாலே அரசு அனுமதி
பெறாமல் நடத்துவதுதான் என்பது எல்லோருக்கும்
தெரிந்ததுதானே!


சில்லறை வர்த்தகம் செய்யும்
இறைச்சிக்கூடம் நடத்துகிற
ஏழை  நடுத்தர மக்களின் பிழைப்பு பறிபோகிறது
என்ற உண்மைகூட மக்களுக்கு இன்னும்
சொல்லப் படவில்லையே! சில்லறை இறைச்சிக்கூடம்
நடத்துபவர்களை வயிற்றில் அடிக்காதே என்று
ஒரு கட்சியும் இன்னும் குரல் எழுப்பவில்லையே!

மாட்டுக்கறி விவகாரம்!
மோடி அரசின் சட்டம்!
என்ன செய்ய வேண்டும்?
எமது அடுத்த RDX கட்டுரை
விரைவில்! வெளியாகும்!

மது என்பது உணவல்ல. தமிழ்நாட்டில் மாட்டுக்கறி
உண்போர் மிக மிகக் குறைவு. வட இந்திய மற்றும்
வட கிழக்கு மாநிலங்களில் நிலைமை வேறு. ஒரு
தமிழராக இருந்து கொண்டு இந்தப் பிரச்சினையின்
தீவிரத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள முடியாது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக