செவ்வாய், 16 மே, 2017

எஸ்மாவை பயன்படுத்த
அரசுக்கு உத்தரவிடுவது
நீதிமன்றத்தின் வேலை அல்ல!
இது அயோக்கியத்தனமான தீர்ப்பு!

நீதிபதிகள் நாடாள
ஆசைப்பட்டால்
வேலையை ராஜினாமா செய்து
திமுக அதிமுகவில் சேர்ந்து
அமைச்சர் ஆகவும்!

எஸ்மாவும் அது முறியடிக்கப் பட்டதன்
வரலாறும்!
---------------------------------------------------------------------------
1968இல் மத்திய அரசு ஊழியர்கள் நாடு முழுவதும்
வேலைநிறுத்தம் செய்தனர்.வேலைநிறுத்தம்
நடந்த நாள் செப்டம்பர் 19, 1968. அப்போது இந்திரா
காந்தி பிரதமராக இருந்தார். எஸ்மா போன்ற சட்டம்
அப்போது .கிடையாது. எனவே வேலைநிறுத்தத்தை
முறியடிக்க, இந்திரா காந்தி ஒரு அவசரச் சட்டத்தை
(ordnance) பிரகடனம் செய்தார். அவசரச் சட்டம் தீவிரமாக
செயல்படுத்தப் பட்டது.  அடக்குமுறை கட்டவிழ்த்து
விடப்பட்டது. என்றாலும் அதையும் மீறி வேலைநிறுத்தம்
நடைபெற்றது.

முன்னதாக, 1960இல் மத்திய அரசு  ஊழியர்கள்
நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்தனர்.
சோஷலிச(!) நேரு அப்போது பிரதமர். இந்த
வேலைநிறுத்தம் குறித்து நேரு என்ன சொன்னார்
என்பது முக்கியமானது. இந்த வேலைநிறுத்தம்
எனது அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போர்
(It is a civil war against govt) என்றார் நேரு.
 
1981இல் இந்திய நாடாளுமன்றம்  எஸ்மா சட்டத்தை
இயற்றியது. Essential Services Maintenance Act 1981 என்பது
.இச்சட்டத்தின் பெயர். போக்குவரத்து, மருத்துவம்,
 தொலைதொடர்பு ஆகியவை அத்தியாவசிய
சேவைகளாக வரையறுக்கப் பட்டன.

எஸ்மா மத்திய அரசின் சட்டம். இதையொட்டி
மாநில அரசுகள் தங்கள் மாநிலத்துக்கான சட்டத்தை
இயற்றிக் கொள்ள அனுமதிக்கப் பட்டது. அதன்படி,
பல்வேறு மாநில அரசுகள் தங்களுக்கான எஸ்மா
சட்டத்தை இயற்றிக் கொண்டன.

ஆக அடக்குமுறைகள் தொடர்கின்றன. தொழிலாளி
வர்க்கத்தின் எதிர்ப்பும் தொடர்கிறது. தொலைத்தொடர்பு
தொழிலாளர்கள் எஸ்மா சட்டத்தை தூள்தூளாக
நொறுக்கியது இந்த நாட்டின் வரலாறு.  அது பற்றி
பின்னர் எழுதுவேன்.
***************************************************************
எஸ்மா சட்டத்தை
தூள்தூளாக நொறுக்கிய
தொலைதொடர்பு
தொழிற்சங்கம் NFTE
போக்குவரத்து தொழிலாளிக்கு
 உத்வேகம் தருகிறது. 
NFTE என்பது தொலைதொடர்பு தொழிலாளர்களின்
இடதுசாரித் தொழிற்சங்கம். AITUCயின் தோழமைச் சங்கம்.  

சேவை முடக்கம் சட்டபூர்வமானது!
---------------------------------------------------------------
வேலைநிறுத்தம் என்றாலே  சேவை முடக்கம் அல்லது
உற்பத்தி முடக்கம் ஆகும். உலகெங்கும் வேலைநிறுத்தம்
என்பது தொழிலாளியின் சட்டபூர்வமான உரிமை.
அடிப்படை உரிமை.

இதன் பொருள் சேவை முடக்கம் அல்லது உற்பத்தி
முடக்கம் என்பது தொழிலாளர்களின்
அடிப்படை உரிமை. உலகெங்கும் உள்ள சட்டங்கள்
இதை உறுதி செய்கின்றன. எனவே சேவை முடக்கம்
என்பது சட்ட !பூர்வமானது!  ஆகும். இது
*************************************************************

ஓய்வூதிய நிலுவை
1000 கோடி வழங்க அரசு ஒப்புதல்!
உடன்பாட்டை அடுத்து
வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!

மூன்று அமைச்சர்களுடன் LPF, CITU,AITUC உள்ளிட்ட
வேலைநிறுத்தம் செய்யும் தொழிற்சங்கத்
தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில்
உடன்பாடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக