திங்கள், 8 மே, 2017

வெறி பிடித்த மோடியின் குலத்தொழில் என்ன?
ஏன் மோடியால் திணிக்க முடியவில்லை?
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
1) மோடி ஒரு சம்ஸ்கிருத வெறி பிடித்த ஆள்.
சம்ஸ்கிருத வெறி என்பது மிருக வெறியே!

2) மத்திய பாஜக அரசு ஒரு சம்ஸ்கிருத வெறி
பிடித்த கேவலமான அரசு!

3) மோடியின் குலத்தொழிலே சமஸ்கிருதத்தை
திணிப்பதுதான்.

4) எங்கும் சமஸ்கிருதம், எதிலும் சமஸ்கிருதம்,
கக்கூஸிலும்  சமஸ்கிருதம் என்பதுதான்
பாஜக அரசின், மோடியின் கொள்கை!

5) மேலே சொன்ன நாலு அம்சமும் உண்மைதானே!

6) அப்படியானால், நேற்று (மே 7, 2017) நடந்த நீட்
தேர்வை ஏன் மோடி சமஸ்கிருதத்தில் நடத்தவில்லை?

7)சம்ஸ்கிருத வெறி பிடித்த மோடியும் சமஸ்கிருதத்தை
திணிப்பதையே குலத்தொழிலாகக் கொண்ட பாஜக
அரசும் ஏன் நீட் தேர்வில் சமஸ்கிருதத்தைத்
திணிக்கவில்லை?

8) தமிழ், கன்னடம், ஒரியா, அசாமி உட்பட மொத்தம்
10 மொழிகளில் நீட் தேர்வு நடக்கும்போது, ஏன்
சம்ஸ்கிருதத்தில் நடக்கவில்லை?

9) ஏன்? ஏன்? ஏன்? சமஸ்கிருதத் திணிப்பு என்று
பூச்சாண்டி காட்டுகிற கயவர்களின் பதில் என்ன?

10) உண்மை என்ன தெரியுமா? மோடி மட்டுமல்ல,
அவரது அப்பனே வந்தாலும், அல்லது ஈசனே
வந்தாலும், சமஸ்கிருதத்தைத் திணிக்க முடியாது.

11) ஏன் தெரியுமா? சமஸ்கிருதம் உற்பத்தியின்
மொழி அல்ல. (Not a language of production). சமூகத்தின்
பொருள் உற்பத்தியில் செயல்படும் மொழிதான்
உயிர்வாழ முடியும். அந்த மொழி மட்டுமே
உற்பத்திச் சக்திகளால் ஏற்கப் படும்.

12) முந்திய பாராவில் (para 11) சொன்ன விஷயங்களைப்
புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மார்க்சியப்
பொருளாதாரம் தெரிந்திருக்க வேண்டும்.

13) மார்க்சிய பொருளாதாரம் கற்றுக் கொள்ள
விரும்புவோர் தோழர் எ கா ஈஸ்வரன், தோழர்
தா ஜீவானந்தம் ஆகிய தோழர்களைத் தொடர்பு
கொள்ளவும்.

14) எனவே சமஸ்கிருதத் திணிப்பு என்பது
பூச்சாண்டியே! இதை இந்தப் பதிவில்
நிரூபித்து உள்ளேன். QED.
********************************************************      



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக