புதன், 24 மே, 2017

ஏற்கிறேன்; ஏற்றுக் கொண்டுதான் உள்ளேன்.நன்றி.
அச்சு ஊடகம், வாய்ப்பு கிடைத்த அளவுக்கு
மின்னணு ஊடகம், சமூகத்தின் பொதுவெளி
அரங்குகள் மற்றும் இறுதியாக முகநூல் ஆகிய
அனைத்தையும் பயன்படுத்துகிறேன்.
**
முகநூலில் வரவேற்பு குறைவாக உள்ளது.
பொதுவெளியில் மட்டும் என்ன வாழ்கிறது? தமிழ்நாட்டில்,
ஆண்டுதோறும் 11 லட்சம் பேர் ப்ளஸ் டூ எழுதுகின்றனர்.
காலை அறிவியல் படிப்பு மற்றும் பொறியியலையும்
சேர்த்தால் மேலும் 3 லட்சம் பேர். இருந்தாலும்
அறிவியல் ஆர்வம் இதற்குப் பொருத்தமாக இல்லை.
(HIGHLY DISPROPORTIONATE). அறிவியல் நாத்திகம் இங்கில்லை.
வெற்றுச் சவடால் மட்டுமே உள்ளது. இதுதான் ஒட்டு
மொத்தச் சித்திரம். என்றாலும் இங்கு இயன்ற அளவு
அறிவியலை, கணிதத்தை கொண்டு செல்வது
தவிர்க்க இயலாக கடமையாக உள்ளது.
**
உழைப்பு வீணாகாமல் தக்க இடத்தில் செலுத்தப்
பட வேண்டும் என்ற தங்களின் கருத்தில்
உடன்படுகிறேன்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக