ஞாயிறு, 28 மே, 2017

முதலாளிகளுக்கு மரண அடி!
தொழிற்சங்கங்களின் வெற்றி!
--------------------------------------------------------
தொழிலாளர் நலனுக்காக வருங்கால வைப்பு  நிதி
உள்ளது. ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும்
தொழிலாளர்களுக்கு உரிய வருங்கால வைப்பு
நிதிக்கு  (Provident Fund) நிர்வாகம் தனது பங்கைச்
செலுத்த வேண்டும். இது management contribution
எனப்படும். இது தற்போது 12 சதமாக உள்ளது.

இதை 10 சதமாகக் குறைக்க வேண்டும் என்று
நிர்வாகத் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.
அரசுக்கு கடுமையான அழுத்தம் தந்தனர் சுரண்டல்
முதலாளிகள்.

இடதுசாரித் தொழிற்சங்கங்கள் இதைக் கடுமையாக
எதிர்த்தன. 10 சதமாகக் குறைக்க விட மாட்டோம்
என்று  போர்க்கொடி உயர்த்தின.

இருதரப்பு வாதங்களையும்  பரிசீலித்த வருங்கால
வைப்பு நிதியின் உயர்மட்டக் குழு, முதலாளிகளின்
கோரிக்கையை நிராகரித்தது. எனவே  நிர்வாகத்தின்
பங்களிப்பு (management contribution) 12 சதமாக நீடிக்கிறது.

இத்தகவலை இன்று மத்திய தொழிலாளர் நலத்துறை
அமைச்சர் பங்காரு தத்தேத்ரேயா அறிவித்தார்.
அமைச்சருக்கும் EPF நிர்வாகத்திற்கும் நன்றி!
*****************************************************************
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக