செவ்வாய், 30 மே, 2017

திராவிட நாடு
சாத்தியமற்றது என்று கருதிய
அண்ணா அதை தலை முழுகத் 
துடித்தார்! பிரிவினைத் தடைச் சட்டம்
வந்ததும் தலை முழுகினார்!

திராவிட நாடு என்பது வேண்டாத சுமை என்று
அறிஞர் அண்ணா கருதினார். எப்போதடா
இதைத்  தலை முழுகலாம் என்று சந்தர்ப்பத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்தார் அண்ணா.
வாராது வந்த மாமணியாக, பிரிவினைத்
தடைச் சட்டம் வந்தவுடன், திராவிட நாட்டைத்
தலை முழுகினார். இதுதான்  மெய்யான வரலாறு.

1962இல் இந்திய சீனப் போர் வந்தது. பிரிவினைத்
தடைச் சட்டமும் வந்தது. திராவிட நாடு என்ற
கற்பனாவாதத்தை அறிஞர் அண்ணா தூக்கி எறிந்தார்.
இந்திய சீனப் போரில், இந்தியாவைத்  தீவிரமாக
ஆதரித்தார். இவற்றின் விளைவாக 1967இல்
ஆட்சியைப் பிடித்தார்.சரியான நேரத்தில் சரியான
முடிவை எடுத்து திராவிடநாட்டைத் தலை முழுகாமல்
இருந்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
அறிஞர் அண்ணா போற்றுதலுக்கு உரியவர்.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக