ஞாயிறு, 28 மே, 2017

மாய மந்திர எண்!
=======================
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
என்னிடம் ஒரு எண் உள்ளது. அது 59 ஆகும்.
இந்த 59ஐ 6ஆல் வகுத்தால் 5 மீதி வருகிறது.
5ஆல் வகுத்தால் 4 மீதி வருகிறது.
4ஆல் வகுத்தால் 3 மீதி வருகிறது.
3ஆல் வகுத்தால் 2 மீதி வருகிறது.
நீங்களும் வகுத்துப் பார்த்து இதை உணரலாம்.

இப்போது ஒரு கேள்வி. இதே போல் பல எண்கள் உண்டு.
இது போன்ற  நான்கு இலக்க எண் ஒன்றை நீங்கள்
சொல்ல வேண்டும். அந்த எண் மிகக்குறைந்த
நான்கு இலக்க எண்ணாக இருக்க வேண்டும்.
விடை தாருங்கள்!

குறிப்பு: 1000 முதல் 9999 வரையிலான எண்களே
நான்கு இலக்க எண்கள் ஆகும்.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
********************************************************* 
புனிதமான காயத்ரி மந்திரத்தை
உருவாக்கி பாரதத்திற்கு அளித்த
விசுவாமித்திர முனிவர்
ஒரு சத்திரியர்!
இவர் நாய்க்கறி உண்டவர்!  

இந்திய மாநிலமான
நாகாலாந்து மக்கள் 
நாய்க்கறி (குத்தா கானா)
உண்கிறார்கள் என்பது
தெரியுமா நண்பர்களே!


மாடு தின்னத் தடை இல்லை!
-----------------------------------------------------
மாட்டு இறைச்சி உண்பதற்கு
மோடி அரசு தடை விதிக்கவில்லை!
தாராளமாக யார் எவரும்
மாட்டுக்கறி உண்ணலாம்!
பின் எதற்குத் தடை?
விளக்குகிறார் தோழர் ஜமாலன்!
குறிப்பு: தோழர் ஜமாலன் முற்போக்கு மற்றும்   
இடதுசாரி முகாம்களில் நன்கறியப்பட்ட
ஒரு  எழுத்தாளர்!
----------------------------------------------------------------------------------
தோழர் ஜமாலன் எழுதியுள்ள பதிவு வருமாறு:-
--------------------------------------------------------------------------------

எமது அரசியல் பதிவுகளைப்
படிப்பவர்கள்
எமது அறிவியல் பதிவுகளையும்
கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
அதுவே நேர்மை!  

ஒளிவீசும் உண்மை எது?
------------------------------------------------
திராவிட பெரியாரிய அம்பேத்காரிய அரசியலுக்கு
வால் பிடித்து வால் பிடித்தே கம்யூனிஸ்டுகள்
தங்கள் சுயத்தை இழந்தனர். மார்க்சிஸ்டுகள்
அவர்களுடன்  ஐக்கியம் பேண வேண்டும் என்ற
தங்களின் கருத்து பரவலாகப் பலராலும்
 சொல்லப் படுகிற கருத்து. இது மிக மோசமான
தாராள .வாதம் ஆகும். இது மார்க்சிய அரசியலை
திராவிட தலித் அரசியலுக்கு குறைக்கச் சொல்லும்
குறைத்தல் வாதம் (reductionism) ஆகும். இதை ஏற்பதற்கில்லை.
**
என்றாலும் உங்களின் தாராள வாதக் கருத்தை ஏற்றுச்
செயல்படும் திராவிடக் கட்சியாகச் சீரழிந்து போன
SOC  கண்ணெதிரில் உள்ளது. தலித்திய அடையாள
அரசியல் கட்சியாகவும் என்ஜிஓ அமைப்பாகவும்
 லிபரேஷன் குழுவும் கண்ணெதிரே உள்ளது.
**
அம்பேத்கார் ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான
அடையாள அரசியலின் திருவுருவாக (icon) .திகழ்கிறார்.
அவருடன் கருத்தியல் ரீதியாக  ஐக்கியப் படுவது
என்பது அடையாள அரசியல் புதை சேற்றில்
கண்ணைத் திறந்து கொண்டே விழுவதாகும்.
அடையாள அரசியலே மார்க்சியத்தின் வைரி.
அடையாள அரசியலை அகற்றித் தூர எறியாமல்
மார்க்சியம் ஒருநாளும் இந்திய அரசியலில் தனக்கான
இடத்தைப் பெற .இயலாது.
**
புருதோனும் ஒரு சோஷலிஸ்ட் தானே என்று மார்க்ஸ்
அவருடன் ஐக்கியம் பேணவில்லை. மாறாக ஈவு
இரக்கமின்றி அவரின் கற்பனாவாத குட்டி முதலாளிய
சோஷலிசத்தை தாக்கீது தகர்த்தார். அதே போல,
இந்திய மார்க்சிஸ்டுகள் இந்திய புருதோன்களை
தாக்கித் தகர்த்து வீசி எறியாமல் இங்கே மார்க்சியத்திற்கு
வாழ்வில்லை. இந்த ஒளிவீசும்  உண்மையை உணர்ந்து
புரட்சிகர நடைமுறையை மேற்கொள்ளுகிற ஒரே
மார்க்சிய லெனினியக் கட்சி போல்ஷ்விக் கட்சி மட்டுமே.

நான் சமஸ்கிருதம் கற்றவன்/
என்னிடம் வாலாட்ட வேண்டாம்
என்று எச்சரிக்கிறேன்.
(புரிய வேண்டியவர்களுக்கு மட்டும்)

தலித்தியம், பெண்ணியம்,  தமிழ் தேசியம், சூழலியம்
என்று அடையாள அரசியல் சமூகத்தை சிதறடித்துக்
கொண்டே போகிறது. அடையாள அரசியலின்
தத்துவமாக  பின்நவீனத்துவம் விளங்குகிறது.
அடையாள அரசியலுக்குத்  தேவையான சித்தாந்த
வலிமையை பின்நவீனத்துவம் வழங்குகிறது.
**
பின்நவீனத்துவம்  differentiate செய்து கொண்டே
போகிறது. இதற்கு முடிவுதான் என்ன? எனவே
மார்க்சியம் எல்லாவற்றையும் integrate பண்ண
முயல்கிறது. சமூகமானது பாட்டாளி வர்க்கத்து
தலைமையில் ஒரே வர்க்கமாக integrate ஆவது
ஒன்றே இதற்குத் தீர்வு. இதில் விவாதத்திற்குத்
தேவை  இருப்பதாக நான் கருதவில்லை. இது
முடிந்த முடிவு.     

ஆம், ஆடு மாடு எருமை மான் குதிரை நாய் உள்ளிட்ட
எல்லா விலங்குகளின் இறைச்சியையும்
இதிகாச காலத்து  மக்கள் இயல்பாக உண்டார்கள்.
ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் அல்லது
ராமாயணம் என்ற நூலைப் படிக்கவும். ராம
 லட்சுமணர்கள் வேட்டையாடிக் கொண்டு வந்த
மாமிசத்தை  சீதாப் பிராட்டி சமைத்தார்.  அடுத்து
விசுவாமித்திரர் ஒரு சத்திரியரே. இன்றும் நாகாலாந்து
மக்கள் நாய்க்கறி (குத்தா கானா ) உண்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக