ஞாயிறு, 10 ஜூன், 2018

சுயமரியாதை ஏன் இல்லை?
அறிவியலும் மார்க்சியமும் மட்டுமே
சுயமரியாதையைப் பெற்றுத்  தரும்!
திராவிட இந்துத்துவத்தின் கூத்தாடி மோகம்!
-------------------------------------------------------------------
100 ஆண்டுகளுக்கு முன்பு, 1920களில் தமிழகத்தில்
மக்களிடையே அறியாமையும் மூடநம்பிக்கைளும்
மேலோங்கி இருந்தன. மூடர்களாக, சுயமரியாதை
அற்றவர்களாக மக்கள் இருந்தனர்.

இன்றும் ஒரு பெரும்பகுதி மக்கள் அதே நிலையில்
அறியாமையுடனும் மூடநம்பிக்கையுடனும்
இருக்கின்றனர். ராமச்சந்திர மேனன் மண்டையைப்
போட்டு விட்டார். அவருக்கு ஒரு சமாதி சென்னை
கடற்கரையில் இருக்கிறது.

மேனன் கையில் கட்டி இருந்த கடிகாரத்தில்
இருந்து டிக் டிக் சத்தம் இன்னும் வருவதாக ஒரு
மூடநம்பிக்கை கிளப்பப் பட்டது. இது திராவிட
இந்துத்துவ மூடநம்பிக்கை!

இந்தப் படத்தில் பாருங்கள். மேனனின் சமாதியில்
காதை வைத்துக் கடிகார சத்தத்தைக் கேட்கும்
மேனன் ரசிகர்கள்!

கூத்தாடிகளை முதல்வர்களாக ஆக்கியது பத்தாது
என்று அவர்களைக் கடவுளாகவும் ஆக்கியது
திராவிட இயக்கம். உலகில் மனிதர்கள் வாழும்
வேறு இந்தப் பகுதியிலும் கூத்தாடிகள்
கடவுளாக வணங்கப் படுவதில்லை. இந்த இழிந்த
மூடநம்பிக்கையை தமிழ்ச் சமூகத்திற்குக்
கற்றுக் கொடுத்தது திராவிட இயக்கமே.

இதை மறுப்பவர்கள் வேறு யார் இந்தக் கூத்தாடி
வணக்க மனநிலையை உண்டாக்கினர் என்று
சொல்ல வேண்டும். காமராசரா கூத்தாடியை
வணங்கச் சொன்னார்? ராஜாஜியா கூத்தாடியைக்
கும்பிடச் சொன்னார்?

கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமமூர்த்தியும் கல்யாண
சுந்தரமுமா கூத்தாடியைக் கடவு ஆக்கினார்கள்?
இல்லை.

திராவிட இயக்கமே கூத்தாடிகளைக் கடவுளாக்கி
மக்களை வணங்க வைத்தது. இன்றுவரை நீடிக்கும்
கூத்தாடி ரஜனி மோகம், கூத்தாடி விஜய் மோகம்
என்று சகல விதமான கூத்தாடி மோகத்திற்கும்
திராவிட இயக்கமே காரணம்! இது மறுக்க முடியாத
உண்மை!
*******************************************************  
கூத்தாடி மோகம் தமிழனுக்கு
திராவிடம் அளித்த விஷம்! ஒவ்வொரு
தமிழனும்  யாராவது ஒரு கூத்தாடியின்
ரசிகனே! கூத்தாடியை கடவுள் ஆக்கிய திராவிட இந்துத்துவம்!  

கேரளத்தில் நடிகர் மம்முட்டி முதல்வர் ஆக
முடியுமா? என்னால் ஒரு கவுன்சிலர் கூட
ஆக முடியாது என்று சொன்னார் மம்முட்டி.
ஏனெனல் கேரளத்தில் திராவிட இந்துத்துவம்
கிடையாது.


அறிவியலை எதிர்க்கும் லும்பன்களும்
நியூட்டன் அறிவியல் மன்றத்தை
ஆதரிக்காத குட்டி முதலாளித்துவமும்!
---------------------------------------------------------------------- 
இப்படத்தில் உள்ளவர் திரு பாரிசாலன் என்பவர்.
இவர் ஒரு லும்பன். அறிவியலுக்கு எதிரான மூட
நம்பிக்கைகளை இவர் முகநூலில் தொடர்ந்து
பரப்பி வருகிறார்.

பூமி உருண்டை என்பது மட்டுமல்ல அதன் ஆரம்,
விட்டம், நிறை, கொள்ளளவு, தற்சுழற்சி வேகம்,
சூரியனைச் சுற்றும் வேகம் (ORBITAL VELOCITY)
உள்ளிட்ட அனைத்து விவரங்களையும்  அறிவியல்
கண்டு பிடித்து நிரூபித்து உள்ளது.

என்றாலும், இந்த லும்பனைப் போன்றவர்கள்
அறிவியலுக்கு எதிராக மூட நம்பிக்கைகளைப்
பரப்பி வருகிறார்கள். இதை நியூட்டன் அறிவியல்
மன்றம் முறியடிக்கும்.

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கருத்துக்களை,
அறிவியல் செய்திகளை, கட்டுரைகளைப்
படிப்பதும் பரப்புவதும் ஒவ்வொருவரின் கடமை
ஆகும். நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
கட்டுரைகளை முகநூலில் உள்ள குட்டி
முதலாளித்துவ நபர்கள் படிக்காமல் விடுவதே
பாரி சாலன் போன்ற லும்பன்கள் செல்வாக்குப்
பெறுவதற்குக் காரணம்.
********************************************************

அவரின் அரசியலைப் புறக்கணித்துக் கடந்து
விடலாம். அறிவியலுக்கு எதிராக கருத்துப்
பரப்புரை செய்தால் என்ன செய்வது? அறிவியலுக்கு
எதிராகப் பேசுவதற்கு ஆயிரம் ஆட்கள்!
அறிவியலைப் பரப்ப நியூட்டன் அறிவியல்
மன்றம் மட்டுமே! ஒவ்வொருவரம் அறிவியல்
மன்றம் ஆரம்பித்து அறிவியலைப் பரப்புங்கள்
என்று பேசுகிற ஒவ்வொரு மேடையிலும்
சொல்லிக்கொண்டு வருகிறேன்.
  

முற்றிலும் தவறான பதிவு!
------------------------------------------------
மதிப்புக்குரிய திரு ஷ்யாம் அவர்களுக்கு,
தாங்கள் பகிர்ந்த இந்தப் பதிவு 100 சதம் தவறான
ஒரு புள்ளி விவரத்தை நம்பி எழுதப்பட்டு உள்ளது.

1) இந்தியாவில் மொத்த மருத்துவ இடங்கள் 63835 என்றும்
அதில் 96 சதம் இடங்களை, அதாவது 61649 இடங்களை
ஆகாஷ் பவுண்டேஷன் என்னும் பயிற்சி மையத்தில்
படித்துத் தேறியவர்களே பெறுகிறார்கள் என்றும்
இப்பதிவு கூறுகிறது.

2) இது அப்பட்டமான பொய். மொத்தம் நீட் தேர்ச்சி
பெற்றவர்கள் = 7,14,562. இதில் ஆகாஷ் மையத்தில்
படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் = 61,649. இது மொத்தம்
தேறியவர்களில் 8,6 சதம். எனவே ஆகாஷ் நிறுவனம்
96 சதம் இடங்களைக் கைப்பற்றியதாக எழுதுவது
அறியாமையின் உச்சமாக இருத்தல் வேண்டும்.

3) மருத்துவ அட்மிஷனே தொடங்காத நிலையில்
ஆகாஷ் நிறுவனம் 96 சதம் இடங்களைக்
கைப்பற்றியதாக எழுதுவது இன்னொரு மோசடி.

4) மூத்த பத்திரிகையாளரான தாங்கள் இதுபோன்ற
மோசடிக்குத் துணை போக வேண்டாம் என்று
வேண்டுகிறேன்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர்,
நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை. தேதி: 10.06.2018.
    

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக