திங்கள், 18 ஜூன், 2018

உறுதி செய்த தகவல் என்ன என்பதை,
தற்போதைய நிலை என்ன என்பதைத்
துல்லியமாக எனக்குத் தெரியப் படுத்துமாறு
வேண்டுகிறேன். ஆளாளுக்கு ஒவ்வொன்று
சொன்னால், எது சரி என்று எப்படி அறிவது?
TET தேர்வு எழுதுவோரில் பலர் எங்களது
வாசகர்கள். எனவே சரியான தகவல் என்னவோ
அதை இங்கே பதிவிடலாம். 

இந்திரா காந்தி வங்கதேசத்தை உருவாக்கிக்
கொடுத்தார். ராஜிவ் காந்தி இலங்கையை
உடைக்கும் நோக்கத்துடன் IPKF அனுப்பவில்லை.
மேலும் 1970க்கும் 1990க்கும் இடையில்
உலக நிலைமைகள் மாறி விட்டன. 
அடுத்து, கட்டுரையின் மையக்கருத்து என்ன?
இந்திரா-ராஜிவ் ஒப்பீடு அல்ல. சக்தி வாய்ந்த
இந்திய பிரதமரை CIA கொன்று விட்டது
என்பதும், அந்தச் சதியை EXECUTE பண்ணியவர்கள்
ஏகாதிபத்தியத்தின் கூலிகள் என்பதுமே.
எனவே மையாக கருத்தை ஒட்டி கருத்துக்கள்
விமர்சனங்கள் வந்தால்  நல்லது.

அமெரிக்காவுக்கு என்ன லாபம் என்பது
தனிக்கட்டுரையாக வெளியாகும்.

1999ல் வாஜ்பாய் அரசுதான்.


தமிழ் ஈழ தேசியத் தலைவர், பொட்டு அம்மான்,
அகிலா ஆகியோர்   இறுதி மூச்சு நிற்கும் வரை
போராடி மாண்டவர்கள். தங்களின் தாயக
விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள்
அவர்கள். அவர்கள் மூவருடன் இந்தியர்களான
தமிழர்களை, அதாவது பிறரை ஒப்பிடுவது
என்பதை ஏற்க இயலாது.

எல்லோரையும் சந்தேகப் படலாம். ஆனால்
Suspicion will not take the place of proof என்று ஓர் ஆங்கிலப்
பழமொழி உண்டு. அதாவது சந்தேகம் என்பது
நிரூபணம் ஆகாது என்று பொருள். திட்டவட்டமான
 சாட்ச்சியம், ஆவண ,ஆதாரம், நிரூபணம்
ஆகிய எதுவும் இல்லாமல் வெறுமனே சந்தேகப்
படுவதால் என்ன பயன்?

ஐநாவின் செயல்பாடுகள் உலக மக்களை
மனதில் கொண்டு செய்யப் படுபவை. அவை
மக்களை திருப்தி செய்யும் நோக்கம் கொண்டவை.
அவை ஓரளவுக்கேனும் முற்போக்காகவும்
மக்கள் நலன் சார்ந்தும் இருக்க வேண்டும்.
இருப்பதாக காட்டி கொள்ள வேண்டும். எனவே
ஒவ்வொரு நாடும் ஐநாவுக்கு ஒரு முகமும்
தனக்கான உண்மை முகத்தையும் கொண்டிருக்கும்.
அமெரிக்கா ஐநாவில் அடக்கியே வாசிக்கும்.
எனவே முரண்பாடுகள் தோற்றமளிக்கும்.


ஒருவரைக் கொல்ல வேண்டுமென்றால், அவர்
பிரதமர் பதவியை விட்டு இறங்கி இருக்க வேண்டும்.
அப்போதுதான் கொல்ல முடியும். இந்த
அனுமானத்தின் மீது உங்களின் கருத்து 
எழுப்பப் பட்டுள்ளது. பதவியில்
இருக்கும்போதுதான் இந்திரா காந்தி சுட்டுக்
கொல்லப் பட்டார்.



 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக