சனி, 9 ஜூன், 2018

லிபரேஷன் குழுவின் சீரழிவு!
----------------------------------------------------
காலா படத்தின் பாடல்களை மக்களிடம் பரப்புரை
செய்கிறார்களாம் இந்திய மக்கள் முன்னணியினர்.
சீரழிவின் எல்லையைத் தொட்டு நிற்கும் இழிவு!

நக்சல்பாரி இயக்கம் ஒரே நேரத்தில் இந்தியா
முழுவதும் பரவியது. அதுதான் சாரு  மஜூம்தாரின்
மகத்துவம். இந்தியாவில் மகாத்மா காந்திக்குப்
பிறகு, சாரு ஒருவரால் மட்டுமே நாடு தழுவிய
அளவில், தேசம் முழுவதும் மக்களைத் திரட்ட
முடிந்தது. மேற்கு வங்கத்தில் தோன்றினாலும்,
பீஹார், ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும்
நக்சல்பாரி இயக்கம் பெரும் செல்வாக்குடன் இருந்தது.
செந்தளங்கள் இவ்விரு மாநிலங்களிலும் (பீகாரில்
போஜ்புரி, ஆந்திராவில் ஸ்ரீகாகுளம்) உருவாக்கப்
பட்டன. செந்தளங்களில் போலீஸ் உட்பட அரசின்
அதிகாரம் செல்லுபடி ஆகாது.

மார்க்சியப் பார்வையிலான விமர்சனம்
எது எதற்குப் பொருந்தும்?
-------------------------------------------------------------------------
கலை இலக்கியக் கோட்பாடுகளின்
அடிப்படையிலான விமர்சனம் என்பது
அத்தகைய விமர்சனத்துக்குத் தகுதியான
ஆக்கங்கள் மீது மட்டுமே செய்யப்படும்.
பொதுவெளியில் மக்களுக்கத் தரப்படுகின்ற
அனைத்தும் விமர்சனத்துக்கு அருகதையானவை
அல்ல. புதுமைப்பித்தனை ஜெயகாந்தனை
விமர்சனம் செய்யலாம். தினத்தந்தி கன்னித்தீவு
சித்திரக்கதையை யாரும் விமர்சனம் செய்து
கொண்டிருப்பதில்லை.

காலா படம் கலைப்படைப்பு அல்ல. அது ஒரு
டெம்பிளேட் (template) படம். அது கலையின்
நுட்பங்களை வெளிப்படுத்தும் படைப்பு அல்ல.
அது மக்களை ஏய்த்துக் கோடிகளைக்
குவிப்பதற்காக கார்ப்பொரேட் கொள்ளையர்கள்
அவ்வப்போது "உற்பத்தி" செய்யும் ஒரு product.

மீண்டும் கூறுகிறோம்; காலா ஒரு கலைப்
படைப்பு அல்ல. அது உற்பத்தி செய்யப்பட்ட
ஒரு ப்ரோடக்ட் (product). கோட்பாட்டு ரீதியிலான விமர்சனம்
கலையாக்கங்களுக்கு உரியது; productsக்கு உரியது அல்ல.

ரஜனி ரசிகன் என்பவன் முற்றிலுமாக சிந்தனை
மழுங்கடிக்கப் பட்டவன். அவன் கண்மூடித்தனமாக
ரஜனி மீது வெறியூட்டப் பட்டவன். காலா மட்டுமல்ல
ரஜனியின் படங்கள் அவனை திருப்தி செய்யும்
நோக்கில் எடுக்கப் பட்டவையே. எனவே ஒரு பட
விமர்சனத்தின் மூலம் ரஜனி ரசிகனின் மனதில்
எவராலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த
முடியாது.

தமிழ்நாட்டில் கூத்தாடி மோகமும், கூத்தாடிகளைத்
தலைவனாக ஏற்றுக் கொண்டு கொண்டாடுவதும்
அவர்களை முதல்வர் ஆக்குவதும் ராமச்சந்திர
மேனன் காலத்தில் இருந்து இன்று ரஜனி காலம்
வரை தொடரும் சாபக்கேடு.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் "விஜய்"யின்
படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகவில்லை என்று
ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டான்.
நடிகர்களின் ரசிகன் என்றாலே இவனைப்போல்
அடிமுட்டாள்களும் சிந்தனை மழுங்கடிக்கப்
பட்டவர்களை கொண்ட வெறிக்கூட்டம்தான்.

எனவே எமது காலா பட விமர்சனம் இந்த ரசிக
மூடர்களுக்கானது அல்ல. அது சிந்திக்க
விரும்பும் பிற அனைவருக்கும் ஆனது
.         

இந்தத் துண்டறிக்கை நிச்சயமாக உங்களுக்கான
பதில் அல்ல. நீங்கள் எழுதியுள்ளதைப் படித்த
பின்னர் பதில் கூறப்படும்.
  நியூட்டன் அறிவியல் மன்றம்
திரு சாலமோன் அவர்களுக்கு,
தாங்கள் எழுதிய பின்னூட்டத்தின் முதல்
வாக்கியம் மட்டுமே எனது பதிவின் மீதான
தங்களின் கருத்து ஆகும்.  எனவே
கார்ப்பொரேட் பற்றிய எனது பதில் வருமாறு:

1990களில் நரசிம்மராவ் காலத்தில் LPG கொள்கைகள்
நடைமுறைப் படுத்தப் பட்ட பின்னரே கார்ப்பொரேட்
ஆதிக்கம் ஏற்படத் தொடங்குகிறது. ஒவ்வொரு
துறையாக, ஒவ்வொரு தொழிலாக, கார்ப்பொரேட்கள்
கைப்பற்றிக் கொண்டே வருகின்றனர். சினிமாத்
துறையையும் கார்ப்பொரேட்டுகள் கைப்பற்றிக்
கொண்டனர். எம்ஜியார் சிவாஜி காலத்தில்
சினிமாவில் கார்ப்பொரேட் ஆதிக்கம் கிடையாது.
மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே போன்ற
படங்களில் ரஜனி நடித்தபோது, கார்ப்பொரேட்கள்
சினிமாவைக் கைப்பற்றி இருக்கவில்லை. இது
அண்மைக்காலத்திய நிகழ்வு. இது புதிய விஷயம்
என்பதால் வாசகர்களுக்கு இது வியப்பை
ஏற்படுத்தலாம். என்றாலும் இது உண்மையே.
காலா படம் ஒரு கார்ப்பொரேட் படமே.

நியூட்டன் அறிவியல் மன்றம்


தீர்வு காண (அல்லது கணக்கைப் புரிந்து கொள்ள)
இந்தப் பட்டியல் உதவக்கூடும். எல்லாக் கேள்விகளுக்கும்
சரியான விடை அளித்திருந்தால், இந்தப் பட்டியல்
அதை முழுவதுமாக வெளிப்படுத்துகிறது. இதில்
9 மட்டுமே பொருந்துகிறது (9 x 4= 36, unanswered =36).
C = சரியாக விடையளித்த   கேள்விகள்.
M = பெற்ற மதிப்பெண்கள்
U = விடையளிக்காத கேள்விகள்.

-------------------------------------------------------------------------------
லிபரேஷன் குழுவினர் அதிகாரபூர்வமாகக் கலைத்ததில்
உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட்டது
ஆயுதம் தாங்கிய படைக்குழுவைக் கலைத்தது தான்.
அது தோழர் வி எம் அவர்களின் நேரடி மேற்பார்வையில்
செய்யப்பட்டது. இந்திய மக்கள் முன்னணியைக்
கலைத்ததாகச் சொல்லப்பட்டாலும் அதே பழைய
சக்திகள். நபர்கள் இருந்து கொண்டு இந்திய மக்கள்
முன்னணியை இயக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது கண்கூடாகப் பார்த்து அறிந்த உண்மை.

எனவே லிபேரேஷன் குழுவினர் இந்திய மக்கள்
முன்னணி என்ற அமைப்புடன் தங்களுக்குத்
தொடர்பில்லை என்று சொன்னால் மட்டும் போதாது.
கலைக்கப்பட்ட தங்கள் அமைப்பின் பெயரைப்
பயன்படுத்துவதை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
அதைச் செய்யாத பட்சத்தில் லிபரேஷன் குழுவினர்தான்
பொறுப்பேற்க வேண்டியது வரும்.

இது லிபரேஷன் குழுவினரைக் கண்டிக்கும் பதிவு அல்ல.
மன வருத்தத்தில் எழுதப்படும் பதிவு. ஆயுதப்
புரட்சியை நடத்திய கட்சி ரசிகர் மன்றமாகச் சீரழிவதா என்ற வருத்தம்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக