சனி, 30 ஜூன், 2018

1) கூத்தாடியை தலைவனாக முதல்வராக
ஆக்குவோர் தமிழர்கள் மட்டுமே. வேறு
மாநிலத்தில் இது சாத்தியமே இல்லை.
எம்ஜியார், VN ஜானகி,  ஜெயா எல்லோருமே
சினிமாக் கூத்தாடிகள்தான். கலைஞரும்
சினிமாக்காரரே.ரஜனி , கமல், சீமான், விஜயகாந்த்
எல்லாம் இங்குதான் கட்சி தொடங்க முடியும்.
கூத்தாடியை ஆதரிப்பது அறிவியல் மனப்பான்மையா?

2) தென்னிந்தியாவின் பிற மாநிலங்களில்
ஆற்று மணல் திருட்டு கிடையாது. இயற்கை
வழங்களைக் கொள்ளையடிப்பதும் அதை மக்கள்
பார்த்துக் கொண்டிருப்பதும் தமிழ்நாட்டில்
மட்டும்தான்.

3) எல்லா இடத்திலும் ஊழல் உண்டுதான். தமிழ்நாடு
ஊழலில் முதல் இடம். ஊழலை ஆதரிப்பான்
தமிழன்.

4) வாரிசு அரசியல் எல்லா இடத்திலும்
உண்டுதான். தமிழகம் அதில்  உச்சாணிக்
கொம்பில் உள்ளது. வாரிசு அரசியலை ஆதரிப்பது
அறிவியலுக்கு எதிரானது.
 இன்னும் நிறைய உண்டு. சொல்லிக் கொண்டே
போகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக