புதன், 29 ஜூலை, 2015

அப்துல் கலாம் கண்டு பிடித்த ஸ்டென்ட்!
இதய நோயாளிகளுக்கு வரப் பிரசாதம்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
1) ஸ்டென்ட் (stent) என்றால் குழாய் என்று பொருள். இக்குழாய்
விரிவடையும் தன்மை உடையது.  
A stent is a small expandable tube used during a procedure called
angioplasty..... Dr Ramachandra Barik, Cardiologosit, Nizam's institute of
Medical Sciences.
**
2) கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju stent) என்று அறியப்படும் 
இந்தக் கண்டுபிடிப்பு இதய நோயாளிகளுக்கு ஒரு வரப் 
பிரசாதம் ஆகும். இந்தக் குழாய்கள் (stent) வெளிநாட்டில் 
இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அதன் விலை 
ரூ 55000 ஆகும். கலாம் கண்டுபிடித்த ஸ்டென்ட் இந்தியாவில் 
சுதேசியாகத் தயாரிக்கப் பட்டது. இதன் விலை ரூ 10000 மட்டுமே.
இதயநோய் மருத்துவர் டாக்டர் சோம ராஜுவுடன் இணைந்து 
இக்கண்டுபிடிப்பை கலாம் 1993இல் செய்தார். அப்போது அவர் 
ஹைதராபாத்தில் DRDO நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு 
இருந்தார்.
**
 கலாமின் அறிவுரையின் பேரில், அவருடன் DRDOவில் உடன் 
பணியாற்றிய பொறியாளர் அருண் திவாரி இந்த ஸ்டென்டை 
உருவாக்கினார். கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள், அரிப்புக்கு 
இலக்கு ஆகாமல் இருக்கும் விதத்தில், ஒரு விசேஷமான 
எஃகு போன்ற பொருளால் கப்பலின் பாகங்கள் தயாரிக்கப் படும்.
அந்தப் பொருளைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து இந்த 
ஸ்டென்ட் தயாரிக்கப் பட்டது. அதிகபட்ச ரத்தம் இந்தக் குழாய் 
(STENT) வழியாகப் போனாலும், இக்குழாய் உடைந்து விடாது. 
The material, originally developed to prevent corrosion of naval ships, was refined 
and adapted to ensure that while maximum flow of blood would be permitted 
the stent would not be too weak either.    
**
குறைந்த விலையில் கலாம் கண்டுபிடித்த இந்த ஸ்டென்ட்
காரணமாக, வெளிநாடுகளும் தங்களின் ஸ்டென்ட் விலையைக் 
குறைக்க நேரிட்டது. இதனால் வெளிநாட்டு நோயாளிகளும் 
பயன் அடைந்தனர்.
**
இந்தியாவில் 1990களில், இதயத் தமனி அடைப்பு சார்ந்த 
நோய்களால், 2.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இருப்பினும் ANGIO  சிகிச்சை செய்து கொள்பவர்கள் 20000
பேர் மட்டுமே. இதற்குக் காரணம் சிகிச்சைக்கு ஆகும் செலவே.
கலாமின் கண்டுபிடிப்பு செலவைக் குறைத்து உள்ளதால், 
ANGIO செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
**
கலாம் என்ன கண்டுபிடித்தால் என்ன? நாம் தொடர்ந்து 
அவர் மீது கல் எறிந்து கொண்டிருப்போம் என்கின்றனர் 
குட்டி முதலாளித்துவ லும்பன்கள்.
**************************************************************
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக