புதன், 22 ஜூலை, 2015

அன்புமணி விரைவில் கைது செய்யப் படுவார்!
சி.பி.ஐ அதிகாரிகள் முனைப்பு!
---------------------------------------------------------------------------
1) 2012 ஏப்ரலில் சி.பி.ஐ அன்புமணி ராமதாஸ் மீது டெல்லி
நீதிமன்றத்தில் ஊழல் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில்
குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப் பட்டது.
2) சிறப்பு சி.பி.ஐ நீதிபதி தல்வந்த் சிங் அவர்களிடம் தாக்கல்
 செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் அன்புமணி ராமதாஸ்
உள்ளிட்ட பத்துப்பேர் மீது குற்றம்  சுமத்தப் பட்டுள்ளது.
**
3) 120B பிரிவின் குற்றமுறு சதி மற்றும் ஊழல் தடுப்புச்
சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
4) ஐ.மு.கூ ஆட்சிக் காலத்தில் அன்புமணி நலத்துறை
அமைச்சராக இருந்த போது, மத்தியப் பிரதேச மாநிலம்
இந்தூரில் உள்ள, அடிப்படை வசதிகள் ஏதுமற்ற, INDEX MEDICAL
COLLEGE HOSPITAL and RESEARCH CENTRE என்ற மருத்துவக்
கல்லூரிக்கு, மாணவர் சேர்க்கைக்காக 2008ஆம் ஆண்டில்
அனுமதி வழங்கி ஊழல் புரிந்துள்ளார்.
**
5) இவ்வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக 117 பேர் சேர்க்கப்
பட்டுள்ளனர். ஊழலை நிரூபிக்க உதவியாக 218 ஆவணங்கள்
சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
6) தற்போது வியாபம் ஊழல் விஸ்வரூபம் எடுத்ததை ஒட்டி
அன்புமணி வழக்கில் சி.பி.ஐ முனைப்புக் காட்டி வருகிறது.
இதைத் தொடர்ந்து ஓரிரு தினங்களுக்குள் அன்புமணி ராமதாஸ்
கைது செய்யப் படலாம் என்று சி.பி.ஐ. வட்டாரம்
தெரிவித்துள்ளது.
*****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக