சனி, 25 ஜூலை, 2015

திரு ஒவாய்சியின் ஒப்பீடு தவறு. ராஜீவ் கொலையாளிகள்
மூவருக்கும் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) விதிக்கப் பட்ட
தூக்குத் தண்டனை ரத்து செய்யப் பட்டு ஆயுள் தண்டனையாக
மாற்றப்பட்டு விட்டது. இதைச் செய்தது உச்ச நீதிமன்றம்.
தற்போது அவர்கள் ஆயுள் தண்டனைக் கைதிகள்.
ஆயுள் தண்டனைக் கைதிகளை எப்படித் தூக்கில்
போட முடியும்?
**
யாகூப் மேனன் தூக்குத் தண்டனை பெற்றவர்.
தூக்குத் தண்டனை பெற்ற இன்னொரு கைதியுடன் தான் அவரை
ஒப்பிட முடியும். தூக்குத் தண்டனை பெற்ற யாகூப் மேனனை,
ஆயுள் தண்டனை பெற்ற ராஜீவ் கொலையாளிகளுடன்
ஒப்பிடுவது தவறு.
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக