சனி, 25 ஜூலை, 2015

கியூபாவில் அரசுப் பதவியில் சே குவேரா இருக்கும்போது
பொருளாதார ரீதியாகச் சில பரிசோதனைகளை மேற்கொண்டார்.
அவை யாவும் trial and error ரகத்தைச் சேர்ந்தவை. இத்தகைய
முயற்சிகளை அவர் ஆவணப் படுத்தி உள்ளார். இவை யாவும்
மர்ர்க்சியத்துக்கு  ஒரு பங்களிப்பு (contribution) என்ற அந்தஸ்து பெறத்
தகுந்தவை அல்ல. அவை வெறும் collection of empirical data மட்டுமே.
இவற்றைத்தான் பொலிவிய நாட்குறிப்பு உள்ளிட்ட நூல்களில்
பதிவு செய்துள்ளார்.
**
அவரின் சோஷலிசமும் மனிதனும் படித்துள்ளேன். அதில்
விசேஷம் இருப்பதாக எனக்குப் படவில்லை. இருப்பினும் மீண்டும் படிக்கிறேன், தாங்கள் கூறுவதால். மற்றப்படி, சே குவேராவுக்கு
ஒரு theoreticianக்கான மன அமைப்பே கிடையாது. மார்க்ஸ்-எங்கல்ஸ்-
லெனின்-மாவோ ஆகியோரிடம் இருந்து அவர் பண்புரீதியாக
வேறுபட்டவர். 
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக