வெள்ளி, 14 அக்டோபர், 2016

1) மார்க்சிய மூல ஆசான்கள் ஐவர் (மார்க்ஸ், எங்கல்ஸ்,
லெனின், ஸ்டாலின், மாவோ). எனினும் மார்க்சியம்
தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் தத்துவம்.

2) பாட்டாளி வர்க்கக் கட்சி இல்லாமல் மார்க்சியத்தைச்
செயல்படுத்த முடியாது. எனவே கட்சி கட்டுவதும்
கட்சியில் செயல்படுவதும் அவசியம்.

3) மார்க்சியம் என்பது உலகை மாற்றி அமைப்பதற்கான
தத்துவம். எனவே அது நடைமுறைக்கான தத்துவம்,
அதாவது செயல்பாட்டுக்கான தத்துவம்.

4) உலகை மாற்றியமைப்பது மனிதனின் கடமை.
எனவே மார்க்சியம் மனித மையத் தத்துவம்.
(human centered philosophy). உலகை மாற்றியமைப்பதில்
கடவுளுக்கோ அல்லது வேறெந்த அமானுஷ்யச்
செயல்களுக்கோ இடமில்லை. தற்செயலாகவும்
உலகம் மாறப்போவதில்லை.

5) மார்க்சியம் கற்றலும் கற்பித்தலும் மார்க்சியத்தை
நடைமுறைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க
வேண்டும். அத்தகைய நோக்கமற்ற கற்றலும்
கற்பித்தலும் பயனற்றவை; மார்க்சியமற்றவை.

இவை எமது அடிப்படை நிலைப்பாடுகள்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக