வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஒரு அரசு ஊழியரை அல்லது பொதுத்துறை ஊழியரை
அவர் பணியில் இருக்கும்போது, புகைப்படம் எடுப்பதற்குச்
சட்ட ரீதியாகத் தடை இல்லை. PROTECTED AREA என்றோ
PHOTOGRAPHY BANNED என்றோ அறிவிப்புப் பலகை
இல்லாத இடங்களில், வாடிக்கையாளர்களுக்கு ACCESS
உள்ள இடங்களில் புகைப்படம் எடுக்கத் தடை இல்லை.
**
Technical Installations உள்ள இடங்களில் தடை இருக்கிறது.
இதுதான் அரசாங்கத்தின் சட்டம்.
**
அடுத்து, அந்த வங்கிப் பெண்மணியை, அவர் வீட்டிலோ
அல்லது கடைத் தெருவிலோ வைத்துப் புகைப்படம்
எடுப்பதென்றால், அவரின் அனுமதி வேண்டும். அவர்
ஒரு வங்கியின் பிரதிநிதியாக, ஒரு பொது இடத்தில்
வேலை செய்யும்போது, அவர் தனிமனிதர் அல்லர்.
அவர் நிறுவனத்தின் பிரதிநிதி. எனவே அவரிடம் அனுமதி
பெற வேண்டும் என்ற சட்டம் அங்கு இல்லை.
**
நிற்க. அனுமதி பெற்று அல்லது பெறாமல்
புகைப்படம் எடுக்கப் பட்டது என்ற விவகாரம்
இங்கு பேசுபொருள் அல்ல. பொதுத்துறை வங்கிகளில்
உள்ள சீரழிந்த மக்கள் விரோத வேலைக் கலாச்சாரமே
இங்கு பேசப் படுகிறது. தாங்கள் அதில் நின்று கொண்டு
பேசுவதற்குப் பதிலாக, technical aspectsஇல் புகலிடம்
தேட முயற்சி செய்கிறீர்கள். Please stick to the point.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக